மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: மனைவியை பிரிந்த காரணத்தை சொன்ன தினேஷ்.. பதிலடி கொடுத்த ரச்சிதா.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனைவியும், நடிகையுமான ரச்சிதா மகாலெட்சுமியை பிரிந்த காரணத்தை நடிகர் தினேஷ் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனைவியும், நடிகையுமான ரச்சிதா மகாலெட்சுமியை பிரிந்த காரணத்தை நடிகர் தினேஷ் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி உள்ளே நுழைந்தார். இவர் பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலெட்சுமியின் கணவர் ஆவார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சீசனில் போட்டியாளராக ரச்சிதா பங்கேற்ற நிலையில், இந்த சீசனில் தினேஷ் கலந்து கொண்டுள்ளார்.

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், “உங்கள் வாழ்க்கையிலும் உலகம் அதிரும் படியான சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் உங்களை உருவாக்கி இருக்கலாம், அல்லது அடையாளம் காட்டி இருக்கலாம். பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அது போன்று உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதில் முதலில் பேசிய நடிகர் தினேஷ் கோபால்சாமி, “என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பூகம்பமான சம்பவம் எது என்னவென்று கேட்டால் என்னுடைய திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய இடைவெளி விழுந்தது தான். எல்லோர் வீட்டிலும் இருப்பது போல எனக்கும், என் மனைவிக்கும் சின்ன சண்டை ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் பெரியவர்களால் தீர்க்க முடியாத அளவுக்கு இருவரும் பிரியும் நிலைக்கு சென்று விட்டது.

அந்த பிரச்சினையை இப்போதும் எதிர்கொண்டு தான் வருகிறேன். நான் அதனை ஏற்றுக்கொண்டு பிரச்சனையில் இருந்து வெளியே வர பாசிட்டிவ் விஷயங்களை எடுத்துக் கொண்டாலும், என்னால் வெளியே வர முடியவில்லை. விட்டுக் கொடுக்கவும் முடியாமல் வாழ்க்கை அப்படியே சென்று சென்று கொண்டிருக்கிறது.

எங்கள் பிரிவு நடந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு என்னையே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு மட்டும்தான் அந்த பிரச்சனை இருந்திருக்கிறது என சொல்லவில்லை. அவருக்கும் (ரச்சிதா மகாலட்சுமி) இருந்திருக்கலாம். அவரும் அதையெல்லாம் நிறைய கடந்து வந்து  இருக்கிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கான அந்த விஷயமானது தடைப்பட்டு நிற்கிறது. அதைத் தேடிக் கொண்டே இருக்கிறோம்.  ஆனால் கிடைக்காமல் உள்ளது.

ஒரு கட்டத்தில் நான் வெறுப்படைந்து விட்டேன். இப்போது வந்த வேலைகளை எல்லாம் ஏற்று  செய்து கொண்டு வாழ்க்கை செல்லும் பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதை ஏன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பம் என சொல்கிறேன் என்றால், நாங்கள் இருவரும் நடிகர்கள் என்பதால் எனக்கு அவரும் அவருக்கும் நானும் தான் அடையாளங்கள். அடையாளம் உணர்வுகள் எல்லாம் உடைந்து எங்கே நிற்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிறோம். நிறைய இடங்களில் இப்படி ஒரு பிரச்சனை நடக்கும் போது தான் நம்முடைய உணர்வுகளின் மதிப்பு என்பது தெரிகிறது” என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரச்சிதா மகாலெட்சுமி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் இருக்கும் சிவன் சிலை முன்பு தியானத்தில் ஈடுபடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும், “உங்கள் பக்கத்தின் கதையை நீங்கள் சொல்வதை காட்டிலும் உங்களுடைய கர்ம வினை சிறப்பாக சொல்லும். அதுவரை அமைதியாக இருப்போம்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget