![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து கொஞ்சிய பிக்பாஸ் புகழ் ஸ்ருதி - வைரல் வீடியோ..!
யானையுடன் அன்புடன் பேசி பழகி, அதற்கு முத்தம் கொடுத்து அதனை கட்டிப்பிடித்து கொஞ்சியும் உள்ளார் பிக்பாஸ் புகழ் ஸ்ருதி.
![Watch Video: முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து கொஞ்சிய பிக்பாஸ் புகழ் ஸ்ருதி - வைரல் வீடியோ..! Big Boss Tamil fame Suruthi Periyasamy with elephant shared Instagram video -Watch Video Watch Video: முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து கொஞ்சிய பிக்பாஸ் புகழ் ஸ்ருதி - வைரல் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/76fd6b92bce6d1c6849bc962632d9133_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது.
அந்த வகையில், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி ஜெயதேவன் யானையுடன் போட்டோஷூட் எடுத்துள்ளார். அப்போது, யானையுடன் அன்புடன் பேசி பழகி, அதற்கு முத்தம் கொடுத்து அதனை கட்டிப்பிடித்து கொஞ்சியும் உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வருகிறது.
‘2021 இல் எனக்கு நடந்த ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான, நல்ல நடத்தை கொண்ட செல்லப் பிராணிகளான லட்சுமி மற்றும் சுஷ்மாவை மதுரையில் சந்தித்ததுதான்! அவர்கள், மனிதர்களுடன் பழகும் விதத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். குறிப்பாக எனக்கு நாங்கள் முதல் முறையாக சந்தித்தது போல் இல்லை. நீங்கள் பார்க்கும் இந்த பந்தம் வெறும் 5 சதவீதம் தான். அவர்கள் என்னைப் போல் வேறு எந்த மனிதனுடனும் அதே பிணைப்பைப் பகிர்ந்து கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களிடம் நிச்சயமாக ஒரு சிறப்புப் பிணைப்பு உள்ளது. இந்த அழகான உயிரினங்களை எப்போதும் விரும்புவதால், இந்த படப்பிடிப்பு எனது முழு வாழ்க்கையிலும் மிகவும் பொக்கிஷமாக இருக்கும்! லவ் யூ லக்ஷ்மி மற்றும் சுஷ்மா’ எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)