மேலும் அறிய

Suriya41 : மீண்டும் மீண்டும் ஒரே காட்சி! பாலா மீது கடுப்பான சூர்யா ? - டிராப் ஆகிறதா படம்?

”ஒரு மாதம் ஆன நிலையில் படத்தில் மிக குறைந்த காட்சிகளையே படமாக்கியிருந்தார் இயக்குநர்.  ”

சூர்யா 41..

எதற்கு துணிந்தவன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா , இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க , ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குபவர் இயக்குநர் பாலா.

இந்நிலையில் சூர்யா41 படத்தில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாக பேச போகிறார் என்கின்றனர் படக்குழுவினர். இதற்காக கடந்த மார்ச் மாதம் கன்னியகுமரி பகுதியில் முகாமிட்ட படக்குழுவினர் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்த பொழுது இயக்குநர் பாலாவிற்கு சூர்யாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் அவர் பாதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியானது. மேலும் அதீத பட்ஜெட்டும் இந்த கோவத்திற்கான காரணம் என கூறப்பட்டது.


Suriya41 :  மீண்டும் மீண்டும் ஒரே காட்சி! பாலா மீது கடுப்பான சூர்யா ? - டிராப் ஆகிறதா படம்?

படத்தை கைவிட முடிவு?

ஆனால் தனது காட்சிகள் முடிக்கப்பட்டதால்தான் சூர்யா அங்கிருந்து கிளம்பியதாக படக்குழு தரப்பு தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கவிருந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படாததால் படத்தை கைவிட சூர்யா முடிவெடுத்திருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் படக்குழுவினர்களை தொடர்புக்கொண்டு கேட்ட பொழுது ”அது தவறான தகவல் என்றும் , கன்னியாகுமரியில் சூர்யா மற்றும் மற்ற நடிகர்களுடனான காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஒரு மாதம் ஆன நிலையில் படத்தில் மிக குறைந்த காட்சிகளையே படமாக்கியிருந்தார் இயக்குநர்.  ஒரே ஷார்ட்டையே இயக்குநர் பாலா மீண்டும் மீண்டும் எடுத்து வந்த நிலையில் மீண்டும் அதே காட்சியை  படமாக்கினார். இதனால் ஸ்கிரிப்டில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனை முடித்த பின்னர் மீண்டும் படம் துவங்கும் .. படம் டிராப் எல்லாம் ஆகவில்லை என்றனர். மேலும் செய்திகளில் வெளியானது போல படத்தின் பட்ஜெட் ஒன்றும் அதிகமாகவில்லை . சில கோடிகள் மட்டும்தான் செல்வாகியிருக்கிறது என சூசகமாக பதிலளித்துள்ளனர் படக்குழுவினர்.

சூர்யாவின் சினிமே கெரியரில் பாலா தவிர்க்க முடியாதவர். நந்தா படம்தான் சூர்யாவிற்கு சினிமாவில் மாபெரும் பிரேக் கொடுத்த திரைப்படம் . அந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் பாலாவை தனது சொந்த அண்ணனாகவும் ஆசானாகவுமே சூர்யா பாவிக்கிறார். இந்த சூழலில் இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு இருப்பதாக வெளியான செய்திகள் , ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget