பெயரை மாற்றிய பிரபல நடிகை...கிண்டல் செய்த நெட்டிசன்கள்..கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இன்ஸ்டாகிராமில் பெயரை மாற்றிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை இணையவாசிகள் கிண்டல் செய்ததால் அவர் அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு கோகினூர் எனும் மலையாளப்படம் மூலம் சினிமாவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமானார். தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த அவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் இவன் தந்திரன் படத்தில் நடித்த ஷ்ரத்தாவுக்கு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ஷ்ரத்தாவுக்கு நல்ல முகவரியாக அமைந்தது.
You guys don't worry about this though ☝️this is for me. Just... Just call me Shraddha Srinath. Not das or Kapoor. It's a huge ask i know, especially for interns handling big film accounts. But please, do it for the sake of the journalism school you never graduated from
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
இதனையடுத்து கே-13, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்டஹ் அவர் தற்போது கலியுகம் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் தனது பெயரை ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்வதாக அறிவித்து மாற்றிக் கொண்டார். மேலும் ட்விட்டரிலும் பெயர் மாற்றம் இருக்கும் என தெரிவித்தார். அவரின் பதிவை ரசிகர்கள் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் கலாய்க்க தொடங்கினர்.
I appreciate people who get my name right. So much. Even though your keyboard suggests Das or Kapoor, every fibre of your body tells you that Srinath is the one to type. I appreciate you. I see you. You are loved.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
Okay enough Twitter for the next 4 months thank you for your sassy replies byeeee
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
அதேசமயம் ஷ்ரத்தா கபூர், ஷ்ரத்தா தாஸ் என நடிகைகள் அந்த பெயரில் இருந்தாலும் என் பெயரை சரியாக சொன்னதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ராமா என்பது என் அம்மாவின் பெயர் எனவும் ஷ்ரத்தா குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் இணையவாசிகள் கிண்டல் செய்ததால் ஆவேசமடைந்த அவர் இன்னும் 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Also Read | Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்