மேலும் அறிய

சினிமாத்துறையில் கிடைத்த வெற்றிக்கு என்னோட உழைப்பு தான் காரணம்.. மனம் திறக்கும் நடிகை ரேவதி!

நடிப்பு, டப்பிங் என பன்முகத்திறமையைக் கொண்ட ரேவதிக்கு ரசிகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் கடிதம் அனுப்பி வைப்பார்கள். அதில் ரத்தத்தினால் எழுதிய கடிதங்களை எப்போதும் மறக்கவே முடியாது என்கிறார் நடிகை ரேவதி..

நடிப்பிலும், டப்பிங் கலைஞராகவும் வெற்றிபெற்றமைக்கு தன்னுடைய உழைப்பு மற்றும் கேரக்டரோடு ஒன்றிணைந்து நடித்தது தான் காரணம் என மனம் திறக்கிறார் மண்வாசனை பட நாயகி ரேவதி.

பாரதி ராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஆஷா என்ற ரேவதி. எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை ரேவதி. திரையுலகில் தான் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் நடிப்புத்திறன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றின் வாயிலாக அழகாகப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், பாரதிராஜா படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் பெயரை மாற்றி மாற்றி வைப்பார். அதேப்போன்று தான் எனக்கும் நிகழ்ந்தது. மண் வாசனை படத்தில் நடித்துவிட்டு, படம் வெளியாகும் போது பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்த அவர் தனக்கு ரேவதி என பெயர் வைத்துவிட்டதாகவும், இது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை, இதனால் ரொம்ப அழுதேன் என்று  ரேவதி பகிர்ந்துள்ளார்.

  • சினிமாத்துறையில் கிடைத்த வெற்றிக்கு  என்னோட உழைப்பு தான் காரணம்.. மனம் திறக்கும் நடிகை ரேவதி!

ரேவதியும், நடித்த திரைப்படங்களும்:

மண் வாசனை படம் வெற்றிக்கு பிறகு பல நல்ல திரைப்படங்களில் தான் இதுவரை நடித்துள்ளேன் எனவும் குறிப்பாக மௌனராகம், தேவர்மகன் போன்ற படங்கள் தன்னை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் மற்றும் மோகனுடன் இணைந்து நடித்த மௌனராகம் ஒரு வித்தியாசமான கதைக்களம். விரும்பாத பையனை திருமணம் செய்துக்கொண்டதால் மனைவி விவாகரத்து கேட்பது போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் மணிரத்தினம் கையாண்ட விதம் இப்போதும் மறக்கவே முடியாது என்கிறார். யாராக இருந்தாலும் இதுப்போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கு சற்று யோசிப்பார்கள். ஆனால் மணி சார் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளவில்லை.

இதோடு காதல் மற்றும் ரொமான்ஸ் கேரக்டர் என்றால் அது நவரச நாயகன் கார்த்திக்கிற்கு தான் பொருந்தும். மௌனராகம் படத்திலேயே அதனை நீங்கள் பார்த்துள்ளீர்கள் என்றார். அடுத்ததாக தேவர்மகன். வெளிநாடுகளுக்கு சென்றாலும் இப்போதும் நீங்கள் தேவர்மகன் நாயகி தானே என்பார்கள். அந்தளவிற்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தெய்வாக்கு, கிழக்குவாசல், மறுபடியும், ஜாக்பார்ட், பவர் பாண்டி போன்ற பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக்கு என்னோட பங்களிப்பும், கேரக்டரோடு ஒன்றிணைந்து நடித்தது தான் காரணம் என்கிறார்.

நடிப்பு மட்டுமின்றி கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் தபுவுக்கும், மின்சாரக்கனவு படத்தில் காஜல் அகர்வாலுக்கும், மலையாளப்படத்திற்கு ஸ்ரீதேவிக்கும் டப்பிங்  ஆர்டிஸ்டாக பணியை மேற்கொண்டேன். நான் ஆர்டிஸ்ட் என்பதால் தண்ணீர் போல அத்தனையும் வழிவிட்டு என்னுடைய திறமையை  வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இறங்கினேன் அதில் வெற்றியும் கண்டேன் என்கிறார்.

ரேவதியும், தேசிய விருதுகளும்:

83ல் ஆரம்பித்த என்னுடைய திரைப்பயணத்திற்கு 1993 ல் தான் தேவர் மகன் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றதாகவும், இதனையடுத்து 2002 ல் இயக்குநர், 2012 ல் குறும்பட இயக்குநருக்கு தேசிய விருதைப்பெற்றேன் என பெருமையுடன் ரேவதி பகிர்கிறார். மேலும் தனக்கு தென்றல் வந்து தீண்டு போதும் என அவதாரம் படத்தில் வரும் பாடல் தான் ரொம்ப பிடிப்பதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • சினிமாத்துறையில் கிடைத்த வெற்றிக்கு  என்னோட உழைப்பு தான் காரணம்.. மனம் திறக்கும் நடிகை ரேவதி!

இப்படி நடிப்பு, டப்பிங் என பன்முகத்திறமையைக் கொண்ட ரேவதிக்கு ரசிகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் கடிதம்அனுப்பி வைப்பார்கள். அதில் ரத்தத்தினால் எழுதிய கடிதங்களை எப்போதும் மறக்கவே முடியாது எனவும் இவ்வாறு இப்படி பண்ணாதீங்கள் என்று எழுதி அனுப்பியதாகவும் பகிர்கிறார். மேலும் 12 பக்க ரசிகர்கள் எழுதிய கவிதையை தற்போதும் வைத்திருக்கிறேன் எனவும் இதனை 85 வயதானும் எடுத்துப் பார்த்து மகிழ்வேன் என்கிறார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
Embed widget