சர்வம் மாயா படத்தில் டெலுலு கேரக்டரில் ஏன் நடிக்கவில்லை ? நடிகை ப்ரீத்தி முகுந்தன் விளக்கம்
சர்வம் மாயா திரைப்படத்தில் டெலுலுவாக கதாபாத்திரத்தில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை ப்ரீத்தி முகுந்தன் பகிர்ந்துள்ளார்

ரியா ஷிபு நடித்த டெலுலு கதாபாத்திரம் பரவலாக கவனமீர்த்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் தான் நடிக்க இருந்ததாக ப்ரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்காததற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மலையாளத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நிவின் பாலி நடித்த சர்வம் மாயா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனமீர்த்தது. இந்த படத்தில் டெலுலு என்கிற ஜென் Z பேயாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை ரியா ஷிபு. பிரபல தயாரிப்பு குடும்பத்தில் இருந்து வரும் இவர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படத்தை தயாரித்தார். இன்ஸ்டாகிராமில் இவரது ரீல்ஸூக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நிவில் பாலி படத்தில் டெலுலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக பாராட்டுக்களை குவித்தார். ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் டெலுலு கதாபாத்திரத்தில் முதல் தான் நடிக்க இருந்ததாகவும் பின் ஒரு சில காரணங்களால் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
டெலுலு கதாபாத்திரத்தில் நடிக்காதது ஏன் ?
ப்ரீத்தி முகுந்தன் கூறுகையில் " முதலில் டெலுலு கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருந்தது. ஆனால் நான் நடித்தால் அதில் நிச்சயம் ஒரு லவ் ஏங்கில் கொண்டு வர வேண்டியதாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார். இதனால் வயதில் சிறியவரான ரியா ஷிபுவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தோம். இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பாசிட்டிவான ஒரு அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு அங்கமாக இருந்ததது சந்தோஷமே. " என அவர் தெரிவித்தார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















