![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parvathi Nair: அந்தரங்க புகைப்படங்கள்?; கொலை மிரட்டல் - பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது!
நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
![Parvathi Nair: அந்தரங்க புகைப்படங்கள்?; கொலை மிரட்டல் - பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது! Actress Parvathi Nair files complaint against Youtuber Subash Chandra Bose for Defaming her name Parvathi Nair: அந்தரங்க புகைப்படங்கள்?; கொலை மிரட்டல் - பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/b6f5cf88ee33789fd45169a65d60bf731670394393697501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கும் ஜோடியாக நடித்த இவர் தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ ‘ ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ‘நிமிர்ந்து நில்’ ‘சீதக்காதி’ ‘83’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில் ‘ படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த போது, என் வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் மதிப்புள்ள வைரகற்கள், 3 லட்சம் மதிப்புமிக்க கைகடிகாரம், செல்போன், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. இந்த சம்பவத்தில் எனக்கு என்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) மீது சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
இது ஒரு பக்கம் இருக்க, குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில், பார்வதி தன்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுப்பதாக கூறினார்.
இதனிடையே மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்த பார்வதி, இந்தப்புகார் குறித்து காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் சுபாஷ் ஒரு சைக்கோ. அவர் என்னை வெவ்வேறு விதமாக போட்டோக்களை எடுத்துள்ளார் என்று கண்ணீர் வடித்தார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் பார்வதி நாயர் மீது புகார் அளித்த சுபாஷ், பார்வதி நாயர் மீது தான் வைத்திருக்கும் குற்றசாட்டுகளுக்கு உரிய ஆதாரம் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானலும் காவல்துறையில் காண்பிக்க தயார் என்றும் கூறினார். மேலும் பார்வதி ஆண் நண்பர்களுடன் இரவு விருந்தை கொண்டாடிய போது சில விஷயங்களை நான் பார்த்துவிட்டேன். இதனால் என் மீது கோபம் கொண்ட பார்வதி இவ்வாறு என் மீது வீண் பழிசுமத்துகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் இந்த புகார்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நுங்கம் பாக்கம் காவல்நிலையத்தில் பார்வதி மற்றொரு புகாரை அளித்தார். அந்தப்புகாரில், சுபாஷ் சந்திர போஸ், என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்தப்புகாரின் மீது சுபாஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)