![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parineeti Chopra: ‘காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்’ .. பரீனிதி சோப்ரா திருமண புகைப்படங்கள் வைரல்..!
பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவின் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
![Parineeti Chopra: ‘காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்’ .. பரீனிதி சோப்ரா திருமண புகைப்படங்கள் வைரல்..! Actress Parineeti Chopra and AAP leader Raghav Chadha shared their wedding pictures Parineeti Chopra: ‘காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்’ .. பரீனிதி சோப்ரா திருமண புகைப்படங்கள் வைரல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/1bc79771485f00a272f826212782a3b31695625723348572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவின் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவரின் உறவுப் பெண்ணான பரினீதி சோப்ரா கடந்த 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமனார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக உள்ளார். இப்படியான நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் சின்னத்திரைக்கு சென்றார்.
அங்கு பரினீதி சோப்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே இவருக்கும், ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் அதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இவர்கள் வெளிநாடுகளில் படிப்புக்காக சென்றிருந்த நிலையில் காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா காதலை உறுதி செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. ராகவ் சத்தா எம்.பி., என்பதால் இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஏராளமான அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆனால் பிரனீதி சோப்ரா - ராகவ் சத்தா இருவரும் திருமண தேதி குறித்து அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.
View this post on Instagram
இந்நிலையில் இருவரும் நேற்று (செப்டம்பர் 24) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தவிர்த்து மிக முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆம் ஆத்மி கட்சி பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு வருகை தராமல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகவ் சத்தா உடனான திருமண புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பரீனிதி சோப்ரா பகிர்ந்துள்ளார். இதில் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த நாளுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.. இறுதியாக திரு மற்றும் திருமதியாக மாறியதற்காக ஆசீர்வதிக்கப்பட்டோம். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழ்ந்திருக்க முடியாது. எங்களின் என்றென்றும் இப்போது தொடங்குகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Neeya Naana: கோபிநாத் கேட்ட கேள்வி.. கண்ணீரோடு பதில் சொன்ன மருமகள் - நீயா நானாவில் உருக்கம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)