மேலும் அறிய

Actress Navya Nair: ”இறந்த வீட்டில் கூட செல்ஃபி கேட்கிறார்கள்” - வருத்தப்பட்ட நடிகை நவ்யா நாயர்

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த நவ்யா நாயர்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நடிகை நவ்யா நாயர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில்  மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில் நவ்யா நாயருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இதனையடுத்து பாசகிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதேசமயம், கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார். ரசிகர்கள் அவர் மீண்டும் திரையில் ஹீரோயினாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரீ - எண்ட்ரீ கொடுக்கும் நவ்யா நாயர்

இதனிடையே ஜானகி ஜானே படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற கேரக்டரில்  கடந்த காலங்களில்  நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஏற்பட்ட பயத்துடன் வாழ்கிறார். திருமண வாழ்க்கைக்குள் செல்லும் அவருக்கும் ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரீ-எண்ட்ரீ குறித்து நவ்யா நாயர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கும் மேலாக ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு உள்ளது. நான் நிறைய கதைகள் கேட்டாலும் அவற்றில் இருந்து எனக்கேற்ற சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அதேபோல் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், நான் நடித்த படப்பிடிப்பு தளத்தில் கூட நிறைய பெண்கள் இருந்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் கேரவன் வசதி செய்து கொடுப்பதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது  முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது எல்லோருக்கும் அந்த வசதி செய்து கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். 

அதேசமயம், ரசிகர்களின் செல்ஃபி தொந்தரவு பற்றியும் நவ்யா நாயர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த செல்ஃபி எடுக்கும் செயல் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். ஆனால் ஒரு துக்க நிகழ்வு என்று கூட பாராமல் அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது என நவ்யா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Vijayakanth: ஜோசப் விஜய்யாக நடித்த கேப்டன் விஜயகாந்த்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!
Rajinikanth: பாரதிராஜா எப்படி கதை கேட்பாரு தெரியுமா? சூப்பர்ஸ்டார் பகிர்ந்த ரகசியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Punch EV Real World Milage: பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
பஞ்ச் EV 468 கி.மீ மைலேஜ் தரும் என கூறும் டாடா.! நிஜத்தில் எவ்வளவு தூரம் செல்லும்.? சோதனை முடிவு இதோ
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Embed widget