மேலும் அறிய

Actress Navya Nair: ”இறந்த வீட்டில் கூட செல்ஃபி கேட்கிறார்கள்” - வருத்தப்பட்ட நடிகை நவ்யா நாயர்

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த நவ்யா நாயர்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நடிகை நவ்யா நாயர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில்  மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில் நவ்யா நாயருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இதனையடுத்து பாசகிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதேசமயம், கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார். ரசிகர்கள் அவர் மீண்டும் திரையில் ஹீரோயினாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரீ - எண்ட்ரீ கொடுக்கும் நவ்யா நாயர்

இதனிடையே ஜானகி ஜானே படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற கேரக்டரில்  கடந்த காலங்களில்  நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஏற்பட்ட பயத்துடன் வாழ்கிறார். திருமண வாழ்க்கைக்குள் செல்லும் அவருக்கும் ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரீ-எண்ட்ரீ குறித்து நவ்யா நாயர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கும் மேலாக ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு உள்ளது. நான் நிறைய கதைகள் கேட்டாலும் அவற்றில் இருந்து எனக்கேற்ற சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அதேபோல் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், நான் நடித்த படப்பிடிப்பு தளத்தில் கூட நிறைய பெண்கள் இருந்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் கேரவன் வசதி செய்து கொடுப்பதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது  முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது எல்லோருக்கும் அந்த வசதி செய்து கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். 

அதேசமயம், ரசிகர்களின் செல்ஃபி தொந்தரவு பற்றியும் நவ்யா நாயர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த செல்ஃபி எடுக்கும் செயல் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். ஆனால் ஒரு துக்க நிகழ்வு என்று கூட பாராமல் அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது என நவ்யா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget