மேலும் அறிய

Actress Navya Nair: ”இறந்த வீட்டில் கூட செல்ஃபி கேட்கிறார்கள்” - வருத்தப்பட்ட நடிகை நவ்யா நாயர்

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த நவ்யா நாயர்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நடிகை நவ்யா நாயர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில்  மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில் நவ்யா நாயருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இதனையடுத்து பாசகிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதேசமயம், கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார். ரசிகர்கள் அவர் மீண்டும் திரையில் ஹீரோயினாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரீ - எண்ட்ரீ கொடுக்கும் நவ்யா நாயர்

இதனிடையே ஜானகி ஜானே படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற கேரக்டரில்  கடந்த காலங்களில்  நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஏற்பட்ட பயத்துடன் வாழ்கிறார். திருமண வாழ்க்கைக்குள் செல்லும் அவருக்கும் ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரீ-எண்ட்ரீ குறித்து நவ்யா நாயர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கும் மேலாக ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு உள்ளது. நான் நிறைய கதைகள் கேட்டாலும் அவற்றில் இருந்து எனக்கேற்ற சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அதேபோல் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், நான் நடித்த படப்பிடிப்பு தளத்தில் கூட நிறைய பெண்கள் இருந்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் கேரவன் வசதி செய்து கொடுப்பதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது  முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது எல்லோருக்கும் அந்த வசதி செய்து கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். 

அதேசமயம், ரசிகர்களின் செல்ஃபி தொந்தரவு பற்றியும் நவ்யா நாயர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த செல்ஃபி எடுக்கும் செயல் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். ஆனால் ஒரு துக்க நிகழ்வு என்று கூட பாராமல் அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது என நவ்யா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget