மேலும் அறிய

Magic Radhika: பேச்சை கேட்காத கோபம்.. நேரில் சென்று உதவி கேட்டும் செய்ய மறுத்த எம்ஜிஆர்!

நான் ஜெய்சங்கரின் நாடக குழுவில் நடித்து வந்தேன். ஒரு காமெடி கதையில், நான் அவரின் தங்கையாக நடித்தேன். அந்த குரூப்பில் இருந்த கிடார் வாசிப்பாளரான சந்திரசேகரை தான் நான் காதலித்தேன்.

நான் எம்ஜிஆரிடம் நேரடியாக சென்றும் உதவி கேட்டும் அவர் அன்றைய நேரத்தில் செய்ய மறுத்து விட்டார் என நடிகை மேஜிக் ராதிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மதத்தால் வந்த பிரிவு 

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “என்னுடைய திருமணம் காதல் திருமணமாகும். நான் ஜெய்சங்கரின் நாடக குழுவில் நடித்து வந்தேன். ஒரு காமெடி கதையில், நான் அவரின் தங்கையாக நடித்தேன். அந்த குரூப்பில் இருந்த கிடார் வாசிப்பாளரான சந்திரசேகரை தான் நான் காதலித்தேன். அவரும் ஒகே சொன்னார். அவர் பிராமணம் சமூகத்தை சேர்ந்தவர். நான் கிறிஸ்டியன். ஆனாலும் என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. காதலுக்கு கண் இல்லை என சொல்வதைபோல முறைப்படி அனுமதி பெற்று சர்ச்சில் தான் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்துக்குப் பிறகு அவர் என்னை இந்து முறைகளை பின்பற்ற சொன்னார். ரொம்ப டார்ச்சர் செய்தார். நான் என் கடவுளை விட்டுக்கொடுக்க முடியாது என சொல்லி விட்டேன். அதன்பிறகே நாங்கள் பிரியலாம் என முடிவெடுத்தோம்.சந்திரசேகர் ரொம்ப நல்ல மனிதர். உளவியல் ரீதியாக என்னை எந்த டார்ச்சரும் செய்தது இல்லை. இந்த கடவுள் விஷயத்தில் தான் பிரச்சினை ஆனது. என்னை சர்ச்சுக்கு செல்லக்கூடாது என சொன்னார். பிரிய வேண்டும் என இருந்தால் என்ன செய்வது அப்படித்தான் ஆக வேண்டும். 

எனக்கு சிவாஜியை பார்த்தாலே பயம். அவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை பேசி தான் நாமும் நடிக்கலாம் என சினிமாவுக்கு வந்தேன். அதேபோல் தால் எம்ஜிஆரும் ரொம்ப அன்பானவர். ஒரு குடும்ப உறுப்பினர் போல தான் பழகுவார். மலையாளத்தில் அதே அன்பு இருந்தது. சிவாஜி, எம்ஜிஆரை ஷூட்டிங்கில் தான் பார்ப்பேன். நான் எம்ஜிஆரிடம் சொல்லாமலே திருமணம் செய்து கொண்டேன். அதுதான் நான் செய்த தப்பு. அவசர அவசரமாக எனக்கு கல்யாணம் நடந்தது. 

எம்ஜிஆருடன் மனஸ்தாபம்

ஒருநாள் என்னை சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்தார். என் கணவர் வெளியே காரில் இருந்த நிலையில் உள்ளே சென்று அவரிடம் என்ன விஷயம் என கேட்டேன். உன்னை ஒரு 5 படங்களில் புக் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறேன் என எம்ஜிஆர் சொன்னார். நான் அவரிடம், “எனக்கு திருமணமாகி விட்டது. என் கணவரிடம் ஒரு வார்த்தை கேட்டு வந்து விடவா?” என கேட்டேன். சரி என சொன்னதும் வெளியே வந்து கணவரிடம் விஷயத்தை சொன்னேன். 

அதற்கு என் கணவர், ‘அதெல்லாம் முடியாது. உனக்கு நான் வேண்டுமா? எம்ஜிஆர் வேண்டுமா? என நீயே முடிவு பண்ணிக்க!” என வெளிப்படையாக சொல்லி விட்டார். மேலும், “கல்யாணம் ஆகி 10 நாட்கள் ஆகிறது. நீயே யோசித்துக்கொள்” என சொல்லி விட்டார். நான் எம்ஜிஆரிடம் வந்து இது செட்டாகாது என கூறிவிட்டேன். அவர் எதுவும் சொல்லாமல் பரவாயில்லை என ஒரே வார்த்தையில் கூறி விட்டார். 

ஆனால் எம்ஜிஆருக்கு என்மேல் கோபம் இருந்தது என்பது ஒரு நிகழ்வின் மூலம் தெரிந்தது. எங்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்து ஆனது. கோர்ட்டில் என்னுடைய மகன் என் கணவர் வீட்டுக்கு செல்லும் நிலை உருவானது. நான் ராமாவரம் தோட்டத்தில் அதிகாலை 4 மணிக்கு சென்று என் பையன் என்னை விட்டு போகப்போகிறான். உதவி பண்ணுங்க என சொன்னேன். ஆனால் எம்ஜிஆர், ‘என்னால் முடியாது. அன்னைக்கு நான் சொன்னப்ப என் பேச்சை கேட்கல. உன்னோட திறமையை வைத்து குழந்தையை மீட்டுக்கொள்’ என வெளியே வந்து சொல்லாமல் போன் மூலம் தான் பேசினார். அன்றிலிருந்து எங்களுக்குள்ளான தொடர்பு நின்று போனது” என மேஜிக் ராதிகா கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget