மேலும் அறிய

ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 

நடிகை கஸ்தூரி சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். 

போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஸ்தூரியை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். நடிகை கஸ்தூரி சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், ஐதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தமிழக போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கஸ்தூரி போலீசாரால் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் கஸ்தூரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் 4 பிரிவுகள் பிணையில் வெளியில் வரமுடியாத வழக்குகள் ஆகும் எனவும் வாதாடினார். மேலும் ஜாமின் தரக்கூடாது எனவும் கோரினார். 

இதைத்தொடர்ந்து வாதாடிய கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர், “கஸ்தூரி சிலரை மட்டுமே குறிப்பிட்டார். பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் வருத்தம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார். 

அப்போது பேசிய நீதிபதி “சிலரை மட்டுமே அவர் குறிப்பிட்டார் என்றால் ஏன் அந்தப்புரம் என்ற வார்த்தை வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? அவரின் வருத்தம் தெரிவிக்கும் பதிவு அவர் பேசியதை நியாயப்படுத்துகிறார் என்ற தோற்றத்தை கொடுக்கிறது. அந்த குறிப்பிட்ட வார்த்தைக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில் நேற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
St Thomas Mount Railway Station: சென்னையின் புதிய போக்குவரத்து மையம்.. ஏர்போர்ட் லெவலுக்கு மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்..!
St Thomas Mount Railway Station: சென்னையின் புதிய போக்குவரத்து மையம்.. ஏர்போர்ட் லெவலுக்கு மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்..!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Embed widget