மேலும் அறிய

vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!

வழக்கை விசாரித்த நீதிமன்றம் துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது நியாயமில்லை என கூறி லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மருது’. இந்த படத்தை  தயாரிக்க மதுரை  கோபுரம் ஃபிலிம்ஸ் , ஜி.என்.அன்புச்செழியனிடம்  பணம் கடனாக வாங்கியுள்ளார் நடிகர் விஷால்.  வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய்  பணத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுத்துவிட்டு , அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அன்புச்செழியனின் கடனை அடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஆர்வம் காட்டவில்லையாம். அதன் பிறகு பணத்தை திருப்பி கொடுங்கள் என விஷாலுக்கு கொடுத்த தொடர் அளித்தத்தின் பேரில் வாங்கிய பணத்தில் பாதியை விஷால் திருப்பி கொடுத்துவிட்டு , துப்பறிவாளன் 2 படத்திற்கு பிறகு மீதியை தருவதாக கூறி அதையும்  தரவில்லை. தற்போது வட்டியுடன் சேர்த்து  30 கோடியே  5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாய் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.


vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது நியாயமில்லை என கூறி லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது அதுமட்டுமல்லாமல் விஷாலுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து நடிகர் விஷால் நீதி வென்றுவிட்டது என ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் லைகா தனக்கு கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும்  தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களின் கல்வி உதவித்தொகையாக நடிகர் விஷால் கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 


vishal | லைகா வழங்கிய அபராத தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த விஷால்!

விஷால் தற்போது ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வரிக்காணொளி தற்போது வெளியாகியுள்ளது. “பத்தல” என்னும் அந்த பாடலை இன்று காலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஷால், பெயர் வைக்கப்படாத 31 வது படத்தில்  நடித்து வருகிறார். ஹைதராபாத்தில்  'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக டிம்பில் ஹயாத்தி கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் எண்டர்டைனராக உருவாகி வரும் இந்த படத்தில்  பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். விஷால் 31  படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget