மேலும் அறிய

Vadivelu: " திருநெல்வேலி அவனோட ஊருடா" மாரி செல்வராஜூக்கு ஆதரவாக வடிவேலு ஆவேசம்!

திருநெல்வேலி மாரி செல்வராஜூன் ஊர், அங்கு எங்கு பள்ளம் இருக்கிறது, இல்லையென்று அவருக்குத்தான் தெரியும் என்று நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

நமது தமிழ்நாடு அரசு எவ்வளவோ சோதனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 

மாரி செல்வராஜ்:

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சந்தித்தது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே தன்னுடைய ஊரை சுற்றி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தும் இயக்குநர் மாரி செல்வராஜ் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். 

அவரின் பணி ஒரு பக்கம் பாராட்டைப் பெற்றாலும் இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘களத்தில் இறங்கி பார்த்தால் தான் எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் மாரி செல்வராஜ் பதிலளித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேலும் தனது ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜூக்கு வடிவேலு ஆதரவு:

ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு, “இன்னைக்கு நம்ம அரசாங்கம் எவ்வளவோ சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சென்னையில் புயல் வந்துச்சு. அதை பெரிய அரசியல் ஆக்கிட்டாங்க. ஆனால் தென் மாவட்டங்களில் புயல் வந்துச்சு. அங்கெல்லாம் அரசியல் பண்ண முடியாது. ஏனென்றால் தண்ணி பிச்சிகிட்டு போகுது. எங்க அரசியல் ஆக்க முடியும். ஏனென்றால் எவன் எங்க இருக்கான்னே தெரியல. இதே அரசியல அங்க போய் பண்ண முடியுமா?.

 முடியல,அதான் கத்துறான். அதுல ஒருத்தன் சொல்றான், அவன் ஏன் டைரக்டர் (மாரி செல்வராஜ்) அங்க போறான்னு கேக்குறான். அவனோட ஊருடா அது. அந்த ஊருக்குள்ள பள்ளம் எங்க இருக்கு, மேடு எங்க இருக்கு எல்லாமே அவனுக்கு தானே தெரியும். அங்க போகக்கூடாதா? அவன் ஊர்ல அவன் போகாம வேற யாருடா போக முடியும். 

அதேபோல இன்னொருத்தன், ‘உதயநிதியை ஏன் அங்க அனுப்பி வைக்கிறாங்க’ன்னு கேக்குறான். உதயநிதி யாருடா? போணும்ன்ல. மக்களோட மக்களா நான் இருக்கேன், உங்களோட சேர்ந்து வாழுறேன். மக்களோடு இணைஞ்சு வேலை செய்யணும்னுல. இருக்குற அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் தண்ணில இறங்கி நடந்து போகுற காட்சியெல்லாம் பார்க்குறோம். அந்த அளவுக்கு மேலே அவ்வளவு உத்தரவு போட்டு அது நடந்துகிட்டு இருக்குறதை பார்க்குறோம். இதை அரசியலாக பேச நான் விரும்பவில்லை. எல்லாருக்குமே பங்கு இருக்கு. ஒரு அணில் கொய்யாப்பழம் ஒன்றை வெள்ளத்தில் சிக்கியிருப்பவரிடம் கொடுத்தால் கூட அதற்கு நன்றி சொல்லணும். அது புண்ணியம் தான். 

மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்தான். அவன் ஏன் அங்க போனான்னு இவன் கேட்கான். தப்பு தப்பா பேசுறாங்க. நானும் அடக்கி அடக்கி பார்க்கிறேன். எனக்கு முடியல. மக்கள் படும் கஷ்டத்தை அரசு உணர்ந்து கொண்டே இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget