மேலும் அறிய

Actor Surya : 'ஜெய்பீம்' தேசிய விருது பெற காரணம் இவரா? கசியும் தகவல்கள்.. உண்மையா? வதந்தியா?

Surya : நடிகர் சூர்யா பல ஆண்டுகளாக தன்னுடைய மேனேஜராக இருந்து வந்த தங்கதுரையை பதவியில் இருந்து நீக்கி புதிதாக நண்பர் ஒருவரை நியமனம் செய்துள்ளார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. ஒரு நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று திரைப்படமான 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Actor Surya : 'ஜெய்பீம்' தேசிய விருது பெற காரணம் இவரா? கசியும் தகவல்கள்.. உண்மையா? வதந்தியா?

மேனேஜர் திடீர் நீக்கம் :

மிகவும் பிஸியான ஷெட்யூல் போட்டு நடித்து வரும் நடிகர் சூர்யாவின் ஆஸ்தான மேனேஜராக இருந்து வருபவர் தங்கதுரை. நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவிற்கும் அவர்தான் மேனேஜராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவரை மேனேஜர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் சூர்யா என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை.    

குழப்பத்தில் திரையுலகத்தினர் :

குடும்பத்தில் ஒருவராக சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஆரம்ப காலகட்டம் முதல் அவர்களின் மேனேஜராக இருந்து வந்த தங்கதுரையை நீக்கிவிட்டு தற்போது சூர்யாவின் நண்பரான மனோஜை மேனேஜராக நியமித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது திரையுலகத்தினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Actor Surya : 'ஜெய்பீம்' தேசிய விருது பெற காரணம் இவரா? கசியும் தகவல்கள்.. உண்மையா? வதந்தியா?
கசியும் வதந்திகள்:

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கும் தங்கதுரை தான் மேனேஜராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா அவரை திடீரென நீக்கியுள்ளதால் வேறு சில தகவல்களும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைத்ததோடு 5 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. 

'ஜெய்பீம்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அப்படம் தேசிய விருது பெறுவதற்கு முக்கியமான காரணம் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரைதான் என கூறப்படுகிறது. அவர் அந்த சமயத்தில் தேசிய தேர்வு குழுவில் ஒருவராக இருந்தவர் என்றும் அவரின் பரிந்துரையின் பேரில்தான் அப்படம் தேசிய விருதை பெற்றது என தகவல்கள் தாறுமாறாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

உண்மை என்ன?

உண்மையிலேயே நடிகர் சூர்யா அவரின் மேனேஜர் தங்கதுரையை நீக்கிவிட்டாரா? அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக கூறினால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையேல் ஒரு விஷயத்துக்கு கை, கால், நாக்கு, மூக்கு என பொருத்தி அதை வேறு விதமாக பேசப்படும். 

சினிமாவை பொறுத்தவரையில் யாருக்கு என்ன நடக்கும் யாருடைய நிலை என்னவாகும் என்பதை எல்லாம் கணிக்கவே முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சரியான சான்றாகும் என இணையத்தில் செய்திகளை பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஞானவேல் ராஜா  - அமீர் பிரச்சனையுடன் சூர்யா குடும்பத்தை சம்பந்தப்படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சையின் சேர்ந்துகொண்டது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget