என்னன்னு தெரியாமலேயே ஓட்டு போட்டுட்டீங்களே.. முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்த சாய் தீனா!
நம்மிடம் இருக்கும் நகை, பணத்தை விட படிப்பு தான் முக்கியம். 20,30 வருடங்களுக்கு முன்பு இரவுபாட சாலைகள் இருந்தது. இப்போது அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என நடிகர் சாய்தீனா தெரிவித்துள்ளார்.

நடிகரை பார்த்து கைதட்டாதீர்கள். அதிகாரிகளைப் பார்த்து அவர்களை மாதிரி ஆக வேண்டும் என நினையுங்கள் என திரைப்பட நடிகர் சாய்தீனா மாணாக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விச்சூரில் அம்பேத்கர் இலவச இரவு நேர பாடசாலை திரைப்பட நடிகர் சாய் தீனா தொடங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், படிப்பு தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என அங்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நாம மிகப்பெரிய ஆபத்துல இருக்கோம். நான் சினிமாக்காரன் என்பதால் நீங்கல் கைதட்டுகிறீர்கள். நான் என்ன செய்தேன் என தெரிந்து நீங்கள் கைதட்டினால் அறிவுள்ள பிள்ளைகள். நீங்க என்னன்னு தெரியாமல் போய் ஓட்டு போட்டீர்களே அதிலும் பிரச்னை உள்ளது. இனிமேலும் நம்மகிட்ட இருக்கும் ஓட்டையும், கல்வியையும் சரியாக பயன்படுத்துங்கள். நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் நம் முன்னால் இருப்பவனை புகழ்ந்து பேசி அவனை உயர்த்தி கெட்டது செய்து வைக்க தூண்டுவதே நாம் தான். அந்த மாதிரி யாரையும் புகழக்கூடாது.
ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த நபர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள், அவர் ஏன் இங்கு வர வேண்டும் என கேள்வி கேட்க வேண்டும். அதேபோல் வாக்கு என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஓட்டின் மதிப்பு ஒவ்வொரு மனிதருக்கும் தெரிவதில்லை. அதை நாம் ரசிப்பர்கள், மதம், சாதியைப் பார்த்து செலுத்துகிறோம். கருத்தியல் இல்லாத இந்த சமூகம் கடந்த 2000ம் ஆண்டுகளாக தோற்றுக் கொண்டே இருக்கிறது. எப்போதும் நமக்கு முன்னால் இருப்பவர்கள் யார் என கவனிக்க வேண்டும். இல்லாவிட்டல் நடுஆற்றில் போய் விழ வேண்டியது தான்.
இன்னும் 100 ஆண்டுகள் நாம் பின்னால் சென்று விடுவேன். நடிகரை பார்த்து கைதட்டாதீர்கள். அதிகாரிகளைப் பார்த்து அவர்களை மாதிரி ஆக வேண்டும் என நினையுங்கள். நான் படிக்கவில்லை. எனக்கு அதன் வலி, கவலை தெரியும். 2,3 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் படிக்கவில்லை. என்னுடைய மகன் 9ம் வகுப்பில் 2 முறை ஃபெயிலாகி விட்டான். அவனுடைய கை, காலில் விழுந்து 10ம் வகுப்பு முடித்திருக்கிறான்.
Also Read: பாப்கார்ன் விற்று படத்தை ஓட்டிய அர்ச்சனா கல்பாத்தி.. ஏஜிஎஸ் சினிமாவுக்கு இப்படி ஒரு நிலையா?
நீங்க எல்லாரும் வெறித்தனமாக படிக்க வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். நம்மிடம் இருக்கும் நகை, பணத்தை விட படிப்பு தான் முக்கியம். 20,30 வருடங்களுக்கு முன்பு இரவுபாட சாலைகள் இருந்தது. அந்த வகையில் நான் இந்த இரவு பாடசாலையை தொடங்கியுள்ளேன். விரைவில் அனைத்து ஊர்களிலும் தொடங்குவேன்” என சாய்தீனா தெரிவித்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















