மேலும் அறிய

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!

போதைப் பொருள் பயண்பாட்டில் தனது பெயர் இடம்பெற்ற காரணம் குறித்து நடிகர் கிருஷ்ணா முதல் முறை மனம் திறந்து பேசியுள்ளார் .

தன்னை வைத்து படமியக்குவதாக சொன்னதால் ஒரு நபரை தான் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் அந்த நபர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதால் தன்னையும் காவல்துறை சந்தேகப்பட்டது என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

போதைப் பொருள் பயண்படுத்தியதற்காக கடந்த ஆண்டு நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணாவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் கிருஷ்ணா முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்

போதைப்பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா விளக்கம் 

என்னுடைய முதல் இரண்டு படங்களுமே தோல்விதான். ஆரம்பத்திலேயே தோல்வியை பார்த்துவிட்டதால் நான் வெற்றிகளை பெரிதாக கொண்டாட மாட்டேன். நான் பார்ட்டிக்கு போகமாட்டேன் , க்ளப் போக மாட்டேன். சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன். என்னுடைய முதல் படம் வெளியானபோது நான் நடிகர் என்று தெரியாமல் என்னை ஒரு விருது  விழாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடத்திற்கு வந்து அசிங்கப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதே நேரம் ஏதாவது பார்ட்டியில் யாரையாவது பார்த்தால்  ஹாய் எப்படி இருக்கீங்க என்று தான் கேட்கமுடியும். அதற்கு மேல் அவர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்களுக்கு என்னால் சிரிக்க முடியாது. இந்த மாதிரி சூழல்களை தவிர்ப்பதால் நான் நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறேன் 

என் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால்  நம்பமுடியவில்லை. அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன். நான் மலையில் இருந்ததால் அங்கு சிக்னல் இல்லை. தொலைக்காட்சியை பார்த்துதான் என்னைப் பற்றி இப்படியான ஒரு செய்தி பரவி வருகிறது தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று கிளம்பி சென்னை வர முடிவு செய்தேன். ஃப்ளைட் கிடைக்காததால் அடுத்த நாள் காலையில் என் காரில் கிளம்பிவந்தேன். ஆனால் இங்கு நான் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். 

என்னுடைய நண்பர்கள் பலர் என்னை போக வேண்டாம் , மும்பை பெங்களூர் என்று எங்காவது போய்விட சொன்னார்கள். சிலர் முன் ஜாமீன் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் ஒளிய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். 

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் எனக்கு தெரிந்த ஒரு நபர் இருந்ததால் என்னையும் இதற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஏனால் அவர் என்னை வைத்து பண்ணுவதாக சொல்லியிருந்தார். அதனால் நான் அடிக்கடி அந்த நபரை சந்தித்து வந்தேன். அந்த நபரால் தான் என்னையும் சந்தேகப்பட்டார். என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் அதற்கு பின் என்ன நடந்தது என்பதை ஏன் சொல்லவில்லை. எனக்கு எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டேன். அதை ஏன் யாரும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. " என நடிகர் கிருஷ்ணா பேசியுள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
Embed widget