மேலும் அறிய

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!

போதைப் பொருள் பயண்பாட்டில் தனது பெயர் இடம்பெற்ற காரணம் குறித்து நடிகர் கிருஷ்ணா முதல் முறை மனம் திறந்து பேசியுள்ளார் .

தன்னை வைத்து படமியக்குவதாக சொன்னதால் ஒரு நபரை தான் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் அந்த நபர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதால் தன்னையும் காவல்துறை சந்தேகப்பட்டது என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

போதைப் பொருள் பயண்படுத்தியதற்காக கடந்த ஆண்டு நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணாவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் கிருஷ்ணா முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்

போதைப்பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா விளக்கம் 

என்னுடைய முதல் இரண்டு படங்களுமே தோல்விதான். ஆரம்பத்திலேயே தோல்வியை பார்த்துவிட்டதால் நான் வெற்றிகளை பெரிதாக கொண்டாட மாட்டேன். நான் பார்ட்டிக்கு போகமாட்டேன் , க்ளப் போக மாட்டேன். சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன். என்னுடைய முதல் படம் வெளியானபோது நான் நடிகர் என்று தெரியாமல் என்னை ஒரு விருது  விழாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடத்திற்கு வந்து அசிங்கப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதே நேரம் ஏதாவது பார்ட்டியில் யாரையாவது பார்த்தால்  ஹாய் எப்படி இருக்கீங்க என்று தான் கேட்கமுடியும். அதற்கு மேல் அவர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்களுக்கு என்னால் சிரிக்க முடியாது. இந்த மாதிரி சூழல்களை தவிர்ப்பதால் நான் நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறேன் 

என் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால்  நம்பமுடியவில்லை. அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன். நான் மலையில் இருந்ததால் அங்கு சிக்னல் இல்லை. தொலைக்காட்சியை பார்த்துதான் என்னைப் பற்றி இப்படியான ஒரு செய்தி பரவி வருகிறது தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று கிளம்பி சென்னை வர முடிவு செய்தேன். ஃப்ளைட் கிடைக்காததால் அடுத்த நாள் காலையில் என் காரில் கிளம்பிவந்தேன். ஆனால் இங்கு நான் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். 

என்னுடைய நண்பர்கள் பலர் என்னை போக வேண்டாம் , மும்பை பெங்களூர் என்று எங்காவது போய்விட சொன்னார்கள். சிலர் முன் ஜாமீன் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் ஒளிய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். 

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் எனக்கு தெரிந்த ஒரு நபர் இருந்ததால் என்னையும் இதற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஏனால் அவர் என்னை வைத்து பண்ணுவதாக சொல்லியிருந்தார். அதனால் நான் அடிக்கடி அந்த நபரை சந்தித்து வந்தேன். அந்த நபரால் தான் என்னையும் சந்தேகப்பட்டார். என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் அதற்கு பின் என்ன நடந்தது என்பதை ஏன் சொல்லவில்லை. எனக்கு எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டேன். அதை ஏன் யாரும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. " என நடிகர் கிருஷ்ணா பேசியுள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget