மேலும் அறிய

Actor Kishore: நன்றி கெட்டவர்களுக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.. விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாபில் இருந்து டெல்லி எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் பதிவிட்ட கருத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு குவிந்து வருகிறது. 

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கிட்டதட்ட 13 மாதங்கள் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. இதனிடையே வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாபில் இருந்து டெல்லி எல்லையை நோக்கி புறப்பட்டனர். அவர்களை ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தி மேலும் முன்னேற விடாமல் போலீசார் முள்வேலி, கான்க்ரீட் தடுப்பு சுவர் உள்ளிட்ட பலவற்றை ஏற்படுத்தினார். ஆனால் விவசாயிகள் தடையை மீறி செல்ல முற்பட்டனர். அவர்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் பல விவசாயிகள் காயமடைந்தனர். மத்திய அமைச்சர்களுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய 4 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. 

இதனிடையே விவசாயிகள் மேல் நடைபெற்ற தடியடி தாக்குதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் கிஷோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. தங்களது பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா??
குறைந்தப்பட்ச ஆதார விலை என்று ஆட்சிக்கு வந்த கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த விவசாயிகள் விளைவித்த உணவை உண்டு உயிரோடு இருக்கும் ஊடகங்களும் அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும்?. விவசாயிகளை தடுக்க சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு, தினம் தினம் வார்த்தை மாறும்.

ஆனால் தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. முழு நாட்டிற்கும், விவசாயிகளுக்கும் எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது தொண்டர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்? நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா??” என கேள்வியெழுப்பியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget