மேலும் அறிய

Karthi : "அந்த மாதிரி நிலைமையில் இருந்து, அப்பா எங்களை கொண்டு வந்திருக்கார்" : அரங்கை அழவைத்த நடிகர் கார்த்தி!

"என்னப்பா 50 ரூபா தானே கேட்டார். நீங்க 100 ரூபா கொடுக்குறீங்கன்னு சொன்னா அந்த நூறு ரூபாய எடுத்துட்டு பொய் அவர் என்ன கோட்டையா கட்ட போறார்", என்பார்.

சென்னையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 43வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், ஏழையாக இருந்தாலும், எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் நினைக்கும் உயர்வை எட்டலாம் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் கற்பித்தல், கற்றல் ஆகியவற்றை செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே இங்கு பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும். ஆனால் நமது சமூகத்தில் மதிப்பெண்களை நோக்கிதான் கல்விமுறை உள்ளது. என் அக்கா பையன் கூட பயந்துகொண்டே இருந்தான், என்னடான்னு கேட்டால் நாளைக்கு எக்ஸாம் பயமா இருக்கு என்கிறான். மதிப்பெண்ணுக்காக படித்தால் பயம்தான் மிஞ்சும், அறிவை வளர்க்க படிக்க வேண்டும் என்று கூறினார். 

Karthi :

உடலுறுப்பு தானம்

மேலும் பேசிய கார்த்தி அங்கு வந்து பேசிய ஒரு மாணவரை பாராட்டினார். தினம் தினம் இன்ஸ்டாகிராமில் அடுத்தவர் வாழ்வுடன் நம் வாழ்வை கம்பேர் செய்து வாழ்ந்து வரும் நமக்கு இந்த விழாவிற்கு வரும்போது புதிய புதிய வாழ்க்கை பிரச்சனைகளை தெரிந்துகொள்ள முடிகிறது என்றார். அவர் பேசுகையில், "உடலுறுப்பு தானம் குறித்து நாம் பயந்து கொண்டிருக்கும்போது இது போன்ற ஒரு மேடைகளில் அதனை பற்றி பேசியது மிகவும் முக்கியமானது. நாம வீட்டுக்கு போகும்போது முழு உடல் போகும் என்று தெளிவாக கூறினார் அந்த மாணவர். இதனை மேடையில் பேசுவதற்கு என்னைவிட அதிக தைரியம் வேண்டும். இதைத்தான் கல்வி தருகிறது", என்றார். 

தொடர்புடைய செய்திகள்: பரவும் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்..

சிவகுமார் குறித்து 

தனது தந்தையை பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் கார்த்தி அவருடைய உழைப்பினால் தான் நாங்கள் இங்கே நிற்கிறோம் என்று கூறினார். அவர் நம்பிக்கை வைத்து முன்னேற முடியும் என்று உழைத்தார், இல்லையென்றால், நாங்கள் கிராமத்தில் எங்கோ வேலைக்குதான் சென்று கொண்டிருந்திருப்போம் என்றார். மேலும் பேசிய அவர், "அப்பா இல்லாமல் வளர்வது மிகவும் கஷ்டமான விஷயம். எங்க அப்பா வளரும்போது அப்பா இல்ல, அப்பா இல்லாம தான் இவ்வளவு தூரம் எங்களை கொண்டு வந்தார். எங்கப்பா படிக்கும்போது அவங்க அம்மாதான் படிக்க வச்சாங்க. காலேஜ்லாம் படிக்கும்போது 80 ரூபாய்தான் கொடுப்பாங்க. அதுல இருந்து இந்த நிலைக்கு வந்திருக்கார்", என்றார்.

Karthi :

பணம் மகிழ்வை தருமா?

பணம் குறித்து தந்தை சிவகுமார் சொல்லித்தந்ததை பகிர்ந்த அவர், "நாங்க ரயில்வே ஸ்டேஷன் போகும்போது போர்ட்டர்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட எவ்ளோன்னு கேட்டா 50 ரூபான்னு சொல்லுவாங்க. நமக்கு ஆச்சர்யமா இருக்கும், 20 ரூபா கொடுக்க வேண்டிய இடத்துல 50 ரூபா சொல்லுவாங்க. அப்பா சரி வாங்கன்னு கூட்டிட்டு வந்துட்டு 100 ரூபா கொடுப்பாங்க. என்னப்பா 50 ரூபா தானே கேட்டார் நீங்க 100 ரூபா கொடுக்குறீங்கன்னு சொன்னா அந்த நூறு ரூபாய எடுத்துட்டு பொய் அவர் என்ன கோட்டையா கட்ட போறார். வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போவார், குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போவாரு என்பார். பணம் எப்போதுமே சந்தோஷத்தை கொடுக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படி இல்லை, மத்தவங்களுக்கு கொடுத்து பாருங்க. அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும். நம்ம கிட்ட இருக்குற பணம் மத்தவங்க கிட்ட போகுறப்ப அதோட மதிப்பு கூடுது" என்றார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget