மேலும் அறிய

Goundamani : நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த 50 கோடி சொத்து...20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் வெற்றி

20 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான சுமார் 50 கோடி மதிப்புள்ள நிலம் அவர் கைக்கு திரும்ப கிடைத்துள்ளது

கவுண்டமணி

எத்தனை தலைமுறை கடந்தாலும் காமெடி கிங் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரர் கவுண்டமனி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. டைமிங் காமெடிகளில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் கவுண்டமணி. 

20 ஆண்டுகள் சட்டப்போராட்டம்

நடிகர் கவுண்டமணி கடந்த 1996 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்  நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். 5 கிரவுண்ட் மற்றும் 454 சதுர அடி பரப்பளவுள்ள இந்த நிலத்தில் 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். இதற்காக தனியார் நிறுவனத்தோடு அவர் ஒப்பந்தம் செய்திருந்தார். 15 மாதங்களில் இந்த கட்டிடத்தை கட்டித் தரப்படும் என்றும் இதற்காக 3.58 கோடி ஒப்பந்ததாரர் கட்டணமும் போடப்பட்டது. 

1996 முதல் 1999 ஆம் ஆண்டு வரை கவுண்டமணி தரப்பில் இருந்து ரூ 1.4 கோடி கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததால் கவுண்டமணி சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் கவுண்டமணி செலுத்திய 1.4 கோடி ரூபாயில் 46.51 லட்சத்திற்கு மட்டுமே கட்டுமாணப் பணிகள் முடிந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்தார். கட்டுமானப் பணிகளையும் கவுண்டமணி செலுத்திய முன்பணத்தையும் ஒப்பிடுகையில் 65 லட்சம் பணம் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி கவுண்டமணிக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனம் மீண்டும் அவரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிபடுத்தினார்கள். இந்த தீர்ப்பை திரும்ப பெற கோரி தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த  ஜே. பி பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தனியார் நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு கவுண்டமணிக்கு சொந்தமான 5 கிரவுண்டு நிலத்தை அவருக்கு திரும்ப ஒப்படைக்கச் சொல்லி இறுதி தீர்ப்பு வழங்கியது. 

கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வந்த இந்த சட்டப் போராட்டம் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து நடிகர் கவுண்டமணி தனக்கு சொந்தமான நிலத்தின் சாவியை திரும்பபெற்றுள்ளது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலத்தின் தற்போதை மதிப்பு ரூ 50 கோடியாகும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget