மேலும் அறிய

Rajinikanth Speech: ‛என்னை வாழ வைத்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி’ -விருதுக்கு பின் ரஜினி நெகிழ்ச்சி!

டெல்லி: தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தமிழ்நாடு மக்கள்தான் காரணம் அவர்களுக்கு நன்றி என விருது பெற்ற பிறகு ரஜினி பேசினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவருக்கு அப்போது விருது வழங்காத சூழல் நிலவியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது. 45 ஆண்டுகள் கலை சேவைக்காக அவருக்கு இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினியிடம் வழங்கினார். ரஜினிக்கு விருது வழங்கும்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

இந்திய சினிமாவில் உச்ச விருதாக கருதப்படும் இவ்விருதை இதற்கு முன் செவாலியே சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருக்கின்றனர். தமிழில் சிவாஜி, பாலச்சந்தருக்கு பிறகு ரஜினிகாந்த் இவ்விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய ரஜினிகாந்த், “தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை என் குருநாதர் பாலச்சந்தர், என் நண்பர் ராஜ் பகதூர், அண்ணன் சத்யநாராயணா என்னை இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி. தமிழ்நாடு மக்கள்தான் இந்த விருதுக்கு காரணம்”என்றார்.

விருது வழங்குவதற்கு முன்பாக ரஜினிகாந்த்தின் பயணத்தை நினைவுகூரும் விதத்தில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், அமிதாப் பச்சன், மோகன்லால், ஏ.ஆர். ரஹ்மான், குஷ்பூ, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் ரஜினியை புகழ்ந்து பேசினர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: National Film Awards: கெத்து காட்டிய அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் தாணு தேசிய விருது பெற்றனர்!

National Film Awards: ‛எதிர்பார்ப்பு இல்லாமல் நடித்தேன்...’ தேசிய விருது பெற வந்த விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

சிறந்த நடிகர் தனுஷ்... துணை நடிகர் விஜய் சேதுபதி... டெல்லியில் தேசிய விருது பெற்ற முன்னணி பிரபலங்கள்!

Jail Movie Release: உலகம் முழுக்க ’ஜெயில்’ - வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget