மேலும் அறிய

‛பெரியாரின் பேரன்... அண்ணாவின் தம்பி... கலைஞரின் பிள்ளை... ஸ்டாலின் இருக்கும் வரை...’ திருச்சியில் திருமா பிரச்சாரம்!

trichy corporation election 2022 ‛தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆண்டிருக்க மாட்டார்கள்; எச்.ராஜா தான் ஆண்டிருப்பார்’

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருச்சியில் பிரச்சாரம் செய்தார். 17வது வார்டில் அவர் பிரச்சாரம் செய்து பேசியதாவது: 


‛பெரியாரின் பேரன்... அண்ணாவின் தம்பி... கலைஞரின் பிள்ளை... ஸ்டாலின் இருக்கும் வரை...’ திருச்சியில் திருமா பிரச்சாரம்!

‛‛தமிழ்நாட்டில் முக்கியமான கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தோம். அதிமுக-பாஜக கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற ஆட்சியை கைப்பற்றியது. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அரும்பாடு பட்ட கட்சி விசிக. தமிழ்நாடு முழுவதும் விசிக ஆதரவோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஸ்டாலின் முதல்வராகி 8 மாதங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியாவில் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின் தான் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெரியாரோடு பழகியவர், அண்ணா மடியில் வளர்ந்தவர், கருணாநிதியின் வார்ப்பாக இருந்தவர் ஸ்டாலின். படிப்படியாக பொறுப்பில் வந்து திமுக தலைவராகவும், முதல்வராகவும் உயர்ந்திருக்கிறது. அவரது தலைமையிலான கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் கட்டுக்கோப்பாக உள்ளது. எந்த கட்சியும் தனித்து போகவில்லை. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. அதிமுக நிலை என்ன? அதிமுக தனித்துப் போட்டி, பாஜக தனித்துப் போட்டி, பாமக தனித்துப்போட்டி. அந்த கட்சிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை. 

திமுக கூட்டணி சிதறவில்லை. அதிமுக கூட்டணி சிதறிவிட்டது. திமுக கொள்கை ரீதியான கூட்டணி. கொள்கைக்காக நாங்கள் கூடி நிற்கிறோம். அதிமுகவிற்கு நல்ல தலைமை இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அந்த கட்சிக்கு உள்ளனர். பொதுச்செயலாளர் இல்லாத கட்சி அதிமுக. அதிமுகவிற்கே நல்ல தலைமை இல்லாத போது, அதிமுக கூட்டணிக்கு எப்படி தலைமை இருக்கும். தேர்தல் அறிவித்த மறுநாளே பாஜக கூட்டணி முறிந்தது. பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை.

பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் தமிழ்நாட்டை குறிவைத்து ஆக்கிரமிக்க பார்க்கிறது. அதனால், நாங்கள் ஒற்றுமையுடன் அதை எதிர்க்க கூட்டணியாக உள்ளோம். திருச்சி மாநகராட்சியை திமுக மற்றும் திமுக கூட்டணிகள் கைப்பற்றும். அனைத்து வார்டுகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இது கவுன்சிலர் தேர்தல் தானே, சட்டமன்றத்தில் திமுகவுக்கு ஓட்டு போட்டோமே... இப்போ நம்ம ஊர்க்காரன், நம்ம ஜாதிக்காரன். நம்ம மதக்காரன் என யாருக்காவது ஓட்டு போட்டுவிடாதீர்கள். ஒரு கப்பல் மூழ்க சிறு ஓட்டை போதும். அதை மனதில் வைத்து ஓட்டு போடுங்க. 

பாஜக சராசரி அரசியல் கட்சி கிடையாது. அவங்களுக்கு பெரிய செயல் திட்டம் இருக்கு. அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்துடன் செயல்படுகிறது பாஜக. இந்தியர்களை இரண்டாக பிரித்து, இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நாட்டை இரு பிரிவாக பிரிக்கிறது பாஜக. ஹிஜாப் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. மாணவர்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு முதல்வர் லேப்டாப் வழங்குகிறார்; அங்கு காவி துண்டு தருகிறார்கள். யோசித்து பாருங்கள். நமது செயல்திட்டத்திற்கும், அவர்கள் செயல்திட்டத்திற்கு உள்ள வித்தியாசத்தை பாருங்கள். 

ஒவ்வொவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கு. நாம் நட்புடன் தான் பழகுகிறோம். அதை சிதைக்க வேண்டும்; நம்மை பிரிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். இந்தியர்களை இந்துக்காளாக பிரித்து, இந்துவை மேல்சாதி, கீழ் சாதி என பிரிக்கிறார்கள். அவர்களால் உபியை கைப்பற்ற முடிகிறது, கேரளாவை, ஆந்திராவை அசைத்து பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

ஏனென்றால் பெரியாரின் பேரன், அண்ணாவின் தம்பி, கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.  அவர் இருப்பதால் இங்கு பாஜகவால் வேரூன்ற முடியவில்லை. திமுகவை வீழ்த்திவிட்டால், பெரியாரை பேச இங்கு யாரும் இல்லை என்று பாஜக நினைக்கிறது. தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழ்நாட்டை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆண்டிருக்க மாட்டார்கள்; எச்.ராஜா தான் ஆண்டிருப்பார். இன்று எச்.ராஜாவால் பேச முடியுமா? வாலை ஒட்ட நறுக்கிவிடுவார் ஸ்டாலின்,’’ என்று திருமாளவன் பேசினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
"விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!
தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Chennai Press Club: 8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
Embed widget