மேலும் அறிய

தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை

விழுப்புரம் : தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி எனவும் பறிகொடுக்க துணைபோனவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல் என ஆரணி திமுக வேட்பாளர் தரணிவேந்தன் ஆதரித்து கூட்டேரிப்பட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து மயிலம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:

பாஜகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு அணிலும். அதிமுகவும், தேமுதிகவும் ஒரு அணியிலும் வந்து வாக்கு கேட்கிறார்கள். என்ன சொல்லி வாக்கு கேட்க வேண்டும். பாஜக, அதிமுகவால் தாங்கள் என்ன செய்தோம் என சொல்லி வாக்கு கேட்க முடியுமா. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அமெரிக்காவுக்கு இணையாக பொருளாதாரத்தை கொண்டு செல்வேன் என மோடி கூறினார். ஆனால் நம் ஒவ்வொரு தலையிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் உரிமைகளான உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டார். தமிழகத்தின் உரிமையை பறித்தவர் மோடி, தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுக்க உடந்தையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவில் 50 கோடிக்கு மேல் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த பத்தாண்டு மோடி ஆட்சியில் இவர்களின் சராசரி வருமானம் 176 ரூபாய். மோடி ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு கிடையாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தொழிலாளர்களின சராசரி வருமானம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்களுல்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றிற்கு சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என கூறியுள்ளார். மோடியும் எடப்பாடியும் கூறுவது பொய்யான வாக்குறுதிகள். விவசாய கடன்கள் ரத்து செய்யாத மோடி, அதானி, அம்பானி உள்ளிடட தொழிலதிபர்களுக்கு 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் மோடி. மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை, முதலாளிகளுக்கான ஆட்சி.

இந்த தேர்தல் என்பது எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல். மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் ஆன தேர்தல். ஜனநாயகம் இருந்தால் தான் நாட்டில் எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும் என பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Embed widget