மேலும் அறிய

AIADMK-BJP Alliance: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அச்சாரமே அண்ணாமலைதான் - எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்..!

பாஜக, அதிமுக கூட்டணி இருந்திருந்தால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 சீட் பெற வாய்ப்பு இருந்தது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணாமலை பாஜக தலைவரான பிறகுதான் கூட்டணிக்குள் பிரச்சனை வந்தது என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில், மத்தியில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவினாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40க்கு 40 என்ற அடிப்படையில் ஒரு தலைபட்சமாக வெற்றிபெற்று அசத்தியது. 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பார்க்கப்படும் மற்றொரு கட்சியான அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம். மேலும், அதிமுக தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. 

இந்தநிலையில், வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிமுகவினர் இந்த தோல்வியை படிப்பினையாக எடுத்து கொள்வோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ பாஜக கூட்டணியில் இருந்தபோது அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அதிகமாக பேசியது அண்ணாமலைதான். 

முன்னதாக, தமிழ்நாட்டில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது அதிமுக - பாஜக கூட்டணி சுமுகமாக இருந்தது. ஆனால், அண்ணாமலை பாஜக தலைவரான பின்னர் புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா), அறிஞர் அண்ணா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி தவறாக பேசினார். அதுவும் கூட்டணியில் இருந்து கொண்டே தவறாக பேசினார்.” என்றார்.  

இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம்: 

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம் பாஜக, அதிமுக கூட்டணி இருந்திருந்தால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 சீட் பெற வாய்ப்பு இருந்தது. 
 

வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிமுகவினர் இந்த தோல்வியை படிப்பினையாக எடுத்து கொள்வோம். வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் நிறைய எதிர்பார்ப்புடன் அண்ணாமலைக்கு வாக்களித்தார்கள்.  இதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து இருப்பதால், அண்ணாமலை தான் அளித்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.” என்றார். 

மேலும், “அண்ணாமலை அடுத்த முறை வேறு தொகுதியில் போய் நிற்பார். அண்ணாமலை ஆரம்பத்தில் விமர்சனம் செய்ததால் தான் கூட்டணி  முறிவு ஏற்பட்டது. கூட்டணி இல்லை என்றாலும் அதிமுகவினர் தெளிவாக இருப்போம். 

திமுகவின் தவறான பிரச்சாரத்தால் சிறுபான்மை மக்கள் அதிமுகவை நம்பவில்லை என்று நினைக்கிறோம்.  பாஜகவை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். பாஜக பொய்யை சொல்லி வாக்கு கேட்டார்கள். அதிமுகவிற்கு சிறு சரிவு வந்தாலும் பிரமாண்ட வெற்றி பெறும். அண்ணாமலை அவர் தலைவர் பதவியை பார்த்து கொள்ளட்டும். அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். இந்த தோல்வியால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். இந்த தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.