மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: பரபரக்கும் திருவண்ணாமலை மாவட்டம்.. சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் 11 ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 66 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 9 தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் 10-வது வார்டு. பெரணமல்லூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு மற்றும் புதுப்பானையம் ஒன்றியத்தில் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன.

மேலும், அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்ராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி, கீழ் பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரிய கிளாம்பாடி,சானானந்தல் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 11 ஊராட்சி மன்றத்தலைவர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.

 


உள்ளாட்சித் தேர்தல்: பரபரக்கும் திருவண்ணாமலை மாவட்டம்.. சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்!

 

அதேபோல், அனக்காவூர் ஒன்றியத்தில் 6 வார்டு உறுப்பினர்கள். செங்கம் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், செய்யாறு ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர்கள். மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், போளூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள். புதுப்பாளையம் ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள்,

 

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், தெள்ளார் ஒன்றியத்தில் 8 வார்டு உறுப்பினர், திருவண்ணாமலை ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர்கள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 1 வார்டு உறுப்பினர், வந்தவாசி ஒன்றியத்தில் 3 உறுப்பினர்கள்,  வெம்பாக்கம் ஒன்றியத்தில் 7 வார்டு உறுப்பிர்கள் மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள் என 52 வார்டு உறுப்பினர்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில்  இடங்கள் காலியாக உள்ளன.

 


உள்ளாட்சித் தேர்தல்: பரபரக்கும் திருவண்ணாமலை மாவட்டம்.. சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியுள்ளது. ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சிமன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. 


மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 3 நாட்களாக ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மனு தாக்கல் நடைப்பெற்று வந்த நிலையில் மனு தாக்கல் செய்ய அதிக அளவில் வராததால் தற்போது வரை மனு தாக்கல் மந்தமாக உள்ளது. அதே போன்று கிராம பஞ்சாயத்து தலைவருக்கான வேட்புமனு தாக்கல் ஆரணி ஒன்றியம் அக்ரப்பாளையத்தில் 1நபர்,போளுர் ஒன்றியம் பொத்தாரை 1 நபர், வெண்பாக்கம் ஒன்றியம் 1 நபரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் 

 

 


உள்ளாட்சித் தேர்தல்: பரபரக்கும் திருவண்ணாமலை மாவட்டம்.. சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்!

 

வார்டு உறுப்பினர் பதவிக்கு 27-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 23-ம் தேதி நடைபெறும். மனுக்களுடன் வரும் வேட்பு மனு  25-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினமே, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். 66 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 2ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை  மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடமும், 11 ஊராட்சி மன்றத் தலைவர் இடமும், 52 வார்டு உறுப்பினர் இடமும் காலியாக உள்ளன. அதனை பூர்த்தி செய்ய அக்டோபர் 9ம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை 04175 - 233616 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget