மேலும் அறிய

ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழிற்சாலைகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

பாஜக குறித்து சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம், பாரதிநகர், சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நஞ்சுண்டாபுரத்தில் பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “வரக்கூடிய 19ஆம் தேதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொருத்தவரைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். என்ன காரணம் என்று கேட்டால்? கொடுத்து அழகு பார்த்தது திராவிட முன்னேற்ற கழகம், கொடுப்பதை தடுப்பது பாரதிய ஜனதா கட்சி, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதோ செய்தது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று பொதுமக்கள் அனைவரும் இன்று நல்ல திட்டங்களை கொடுத்து பொதுமக்களுக்கு அழகு பார்த்துக்  கொண்டிருப்பது திராவிட மாடலின் தந்தை முதலமைச்சர் அவர்கள்.

ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு

திராவிட மாடல் அரசு மகளிர்க்கு இலவச பேருந்து, கலைஞர் உரிமை தொகை மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் பாஜக குறித்து சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டியால் தொழில்துறையினரும், சிறு குறு தொழில்துறையினரும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.


ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழிற்சாலைகள் தள்ளாடி கொண்டிருக்கின்றன - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளால் பொருளாதாரம் நன்றாக இருந்தது. எப்பேர்பட்ட கோவையாக இருந்தது? வளமான கோவையாக இருந்தது. பணம் புழக்கம் இப்போது குறைந்து விட்டது. அதனால்தான் முதல்வர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தான், பெண்களுக்கு உரிமைத்தொகை உள்ளிட்டவைகள் வழங்கினார். எனவே தான் கொடுப்பவர்களுக்கும், தடுப்பவர்களுக்கும் ஏற்படும் யுத்தம் தான் இந்த தேர்தல். பாஜக நமக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் நமக்கு கொடுத்தது எல்லாம் விலைவாசி உயர்வு மட்டுமே. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் வாக்களியுங்கள்.

பாஜக பொய் சொல்கிறது

நான் உள்ளூரை சேர்ந்தவன், பாஜக வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர். தாய்மார்கள் இதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதிக பொய் பேசுவார்கள். அதை செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என பொய் பேசுவார்கள். அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது. பிரதமர் ஒரு வாக்குறுதி கொடுத்தார் பெண்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என சொன்னார். கொடுத்துட்டாரா? இப்படி கவர்ச்சிகரமான பொய்களை சொல்லிக்கொண்டு போவார்கள். அதனால் எதுவும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்கள். இதுதான் இன்று இருக்கக்கூடிய நிலை. இந்தியாவில் 10 ஆண்டுகள் நடந்த  அவருடைய ஆட்சி என செய்தார்கள் என எண்ண வேண்டும். இது எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வரக்கூடிய தேர்தலை பொருத்தவரைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும். அதேபோல், அதிமுகவை  பொறுத்தவரை அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. எதற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அவர்களுக்கும், பிஜேபிக்கும் ரகசிய உறவு இருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகு சேர்ந்து கொள்வார்கள். அதிமுக - பாஜகவின் கள்ள உறவு புரிந்துகொள்ளுங்கள், 10 ஆண்டுகளாக நாட்டை சீரழித்த பாஜக - அதிமுகவிற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம். உதயசூரியனை வெற்றி பெற செய்வோம்” எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget