மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

’’ஒரு இயக்கம் வலிமையாக இருக்க அஸ்திவாரமாக இருப்பது தான் இந்த உள்ளாட்சி தேர்தல். இதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும்’’

கிராமப்புறங்களில் அதிமுகவிற்கு  வெற்றி என்பது நல்ல விளைச்சலில் உள்ளது. அதை அறுவடை செய்யும் பணிகளில் நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்று சங்கரன்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து போட்டியிடுகின்ற வேட்பாளர், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தென்காசியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனை சாக்காக வைத்து தி.மு.கவினர் தேர்தலை தள்ளி வைக்க நீதிமன்றம் வரை சென்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தான் தி.மு.க தேர்தலை அறிவித்துள்ளது. இன்றைக்கு தேர்தலை சந்திக்க கூடிய சூழ்நிலையில் உள்ளோம். தென்காசி அதிமுக-வின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டிய சூழலில் உள்ளோம். நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் குறைந்த வாக்குகளில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். நகர்புறங்களில் மட்டுமே வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு அதிக விளைச்சல் உள்ளது - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
உள்ளாட்சி தேர்தல்  கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி. கிராமப்புறங்களில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே கிராமங்களில் நல்ல விளைச்சல் உள்ளது. அறுவடை பணிகளில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். எத்தனையோ துறைகள் இருந்தாலும் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி சேவை செய்கின்ற வாய்ப்பு உள்ளாட்சி துறையில் மட்டுமே உள்ளது. உள்ளாட்சி துறையில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வாக்குகளை பெற வேண்டும். ஒரு இயக்கம் வலிமையாக இருக்க அஸ்திவாரமாக இருப்பது தான் இந்த உள்ளாட்சி தேர்தல். இதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும்.
 
அதிமுக ஆட்சி காலத்தில் கிராமப்புறங்களுக்கு அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், இரு சக்கர வாகனம்  எண்ணற்ற திட்டங்களில் விதிமுறைகளை காரணம் காட்டி மக்கள் பயன் பெறாத வகையில் திட்டங்களை கைவிட்டு விட்டனர் .
 
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்ம் அரசு தான் தி.மு.க. தேர்தல் நேரத்தில் தி.மு.க  525 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகிறது. எத்தனை அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயருக்கு 2, 3 திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
 
ஆகவே ஒவ்வொரு வாக்கும் முக்கியம். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும். வாக்களித்த பிறகு வாக்குப்பெட்டிக்கு சீல் வைப்பதில் இருந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் வரை நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.
 
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வ மோகன் தாஸ் பாண்டியன், மனோகரன், P.G.ராஜேந்திரன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?
Embed widget