மேலும் அறிய

கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்: 15 ஆண்டு போராட்டம், திமுக வாக்குறுதி என்னாச்சு? பணி நிரந்தரம் எப்போது?

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் 12,000 ஆசிரியர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் சுமார் 12,000 ஆசிரியர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற ஒற்றை இலக்கை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருப்பதாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேதனையுடன் தெரிவித்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து நூறுநாட்களில் பணி நிரந்தரம் என கூறிய நிலையில், ஆயிரம் நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படாதது குறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

15 ஆண்டு கால தற்காலிகப் பணி

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2011-2012 ஆம் கல்வியாண்டில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற பாடங்களுக்காக சுமார் 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது இவர்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள உயர்வு விவரங்களை செந்தில்குமார் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்:

  • முதல் உயர்வு: 2014ஆம் ஆண்டில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது.
  • இரண்டாம் உயர்வு: 2017ஆம் ஆண்டில் ரூ. 700 வழங்கப்பட்டது.
  • கடைசி உயர்வு: 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ. 2,300 வழங்கப்பட்டது.

இந்த உயர்வுக்குப் பிறகு, ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரமாக ஆனது.

நம்பிக்கை அளித்த தேர்தல் வாக்குறுதி

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 -ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, ஏப்ரல் 6 -ஆம் தேதி வாக்கெடுப்பும், மே 2 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அப்போது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர் ஸ்டாலின் என்பவரிடம் இந்த ஸ்டாலின் ஆட்சியர் வந்த நூறு நாட்களில் அந்த ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

"பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்த தி.மு.க.வின் பணி நிரந்தரம் வாக்குறுதியை நம்பி, பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தி.மு.க.விற்கே வாக்களித்தனர்," என செந்தில்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பணி நிரந்தரம் எங்கே?

தி.மு.க. வெற்றி பெற்று, மே 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. இதனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நூறு நாளில் பணி நிரந்தரம் செய்வார் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் நம்பினர்.

"முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவதற்கு ஒரு உறுதுணையாக இருந்த, கைகொடுத்த பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து கைதூக்கி விடுவதுதான் அவருக்கு நன்றிக்கடனாக இருக்கும். ஆனால், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை," என்று கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

ஆயிரம் நாட்களுக்குப் பிறகு உதவித்தொகை

பலகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்து சுமார் ஆயிரம் நாட்களை (மூன்று ஆண்டுகளை) நெருங்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு உதவித்தொகை என்ற பெயரில் ரூ. 2,500 வழங்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் சம்பளத்துடன், இந்த ரூ. 2,500 தொகையைச் சேர்த்து மொத்தமாக ரூ. 12,500 வழங்காமல், இரண்டு சம்பளமாக வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு தற்போது 23 மாதங்கள் அதாவது இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும் முதல்வர் பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது பெருமை சேர்க்காது என செந்தில்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனடி நடவடிக்கை தேவை

"இன்னும் 5 மாதங்களில் அடுத்த சட்டசபை தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறுகின்ற கட்சி ஆட்சி அமைத்தாக வேண்டும். எனவே, டிசம்பர், ஜனவரி மாதங்களில் முதல்வர் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கின்றபோதே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்," என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பணி நிரந்தரம் செய்யப் பெரிய அளவில் நிதிச் செலவு ஏற்படாது என்றும், மாதமொன்றுக்கு கூடுதலாக சுமார் ரூ. 20 கோடி மட்டுமே செலவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக முதல்வர் இதைச் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அரசு வேலை, எதிர்காலம் கிடைக்கும் என நம்பி இந்த வேலையில் சேர்ந்த 16 ஆயிரம் பேரில், இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் மரணம், பணி ஓய்வு, அல்லது ராஜினாமா போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

"15 ஆண்டுகளாகத் தற்காலிக வேலையில், தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 என்ற குறைந்த சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே, இனி எஞ்சி இருக்கும் சில ஆண்டுகளை நல்லபடியாக வாழ முடியும்," என்று செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், மே மாதம் சம்பளம் இல்லாமல், அரசு சலுகைகள் இல்லாமல் தொகுப்பூதியத்தில் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களை, தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை சம்பளத்திற்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
Toyota Innova Hycross: 2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
Car Tips: பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
US Iran War China: ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
Embed widget