மேலும் அறிய

UPSC Result 2020: 'என் குறைகளை பார்த்தவர்களிடம் திறமையை காட்ட நினைத்தேன்’ UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித்..!

"மாற்று திறனாளிகள் தங்களுக்கு என தனியாக உலகத்தை சுருக்கி கொள்ள கூடாது.  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்"

ஐஏஎஸ் என்ற இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கடந்தாண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிகளை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பலர் தேர்வாகி உள்ள நிலையில், கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் தேர்வாகி அசத்தியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் -  அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் ரஞ்சித். பிறவியிலேயே செவித் திறன் குறைபாடு உடைய ரஞ்சித், காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்தார். 12 ம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் ரஞ்சித் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார். இதனையடுத்து 2016 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், பின்னர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தார்.  இதனை தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.UPSC Result 2020: 'என் குறைகளை பார்த்தவர்களிடம் திறமையை காட்ட நினைத்தேன்’ UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித்..!

இது குறித்து ரஞ்சித் கூறுகையில், “யுபிஎஸ்சி தேர்வினை தமிழில் எழுதினேன். மொழி தனக்கு  எங்கும் ஒரு தடையாக இல்லை. பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது,  காம்பஸ் இன்டர்வியூவில் செவி திறன் குறைபாட்டை காரணம் காட்டி வேலைக்கு எடுக்காமல் நிராகரித்தனர். என்னுடைய திறமையை காட்ட முடியும் என கூறியும், நிராகரித்தால் எப்படியும் என்னால் சாதிக்க  முடியும் என்பதை நிரூபிக்க தொடர்ந்து முயன்றேன். தொடர் முயற்சியால் தற்போது யுபிஎஸ்சி தேர்வில்  வெற்றி பெற்று உள்ளேன். பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். மாற்று திறனாளிகள் தங்களுக்கு என தனியாக உலகத்தை சுருக்கி கொள்ள கூடாது.  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். ஏழை எளியோருக்கும் மாற்று திறனாளுக்கும் பயனளிக்கும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

 

UPSC Result 2020: 'என் குறைகளை பார்த்தவர்களிடம் திறமையை காட்ட நினைத்தேன்’ UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித்..!
ரஞ்சித் பெற்றோர்

இது குறித்து ரஞ்சித்தின் தாயார் அமிர்தவள்ளி கூறும் போது, ”முதலில் குரூப் 1 தேர்வு எழுதிய போது, அதில்  காது கேளாதோருக்கு ஒதுக்கீடு இல்லை என ரஞ்சித் நிராகரிக்கப்பட்டார். அதன் பின்பு இரண்டு வருடமாக தேர்வுக்கு தயாராகி தற்போது வெற்றி பெற்றுள்ளார்.  ரஞ்சித் சாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் முயற்சி செய்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் தெரிவித்தார். 

 மன்னார்குடியை  R.K.சபரிநாதன் நடத்தும் சந்தோஷ் & சபரி பயிற்சி மையத்தில் படித்த ரஞ்சித், தமிழை விருப்பப் பாடமாக மட்டுமல்லாமல் தேர்வையே தமிழில் எழுதி முதல் முயற்ச்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ள ரஞ்சித்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய குறைபாட்டை பொருட்டாக கொள்ளாமல், திறமை மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற்றுள்ள ரஞ்சித், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவருக்குமே ஒரு உதாரணம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
Congress Seats: மதுரை மேற்கு, மயிலாப்பூர்! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
Congress Seats: மதுரை மேற்கு, மயிலாப்பூர்! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
ஏப்ரல் 1 முதல் 1000க்கும் மேலான அத்தியாவசிய மருந்துகளின் விலை கடும் உயர்வு – மக்களுக்கு புதிய சுமை!
ஏப்ரல் 1 முதல் 1000க்கும் மேலான அத்தியாவசிய மருந்துகளின் விலை கடும் உயர்வு – மக்களுக்கு புதிய சுமை!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
Embed widget