மேலும் அறிய

Engineering Admission: முடிந்த துணைக் கலந்தாய்வு; பொறியியல் மாணவர் சேர்க்கை எப்படி? காலியாக இருக்கும் 44,084 இடங்கள்..

2023- 24ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வின் முடிவில் 44,084 இடங்கள் காலியாக உள்ளன. 

2023- 24ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வுக்கு மொத்தம் 53 ஆயிரத்து 311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 9247 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து 44,084 இடங்கள் காலியாக உள்ளன. 

தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற 442 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஒற்றைக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க 1,60,780 பொறியியல் இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுப் பிரிவுக்கு 1,48,721 இடங்களும் 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு, 12,059 இடங்களும் ஒதுக்கப்பட்டன.  இவற்றுக்கான 3 கட்டக் கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் கூறியதாவது: 

துணைக் கலந்தாய்வின் முடிவில் பொதுப் பிரிவில் மாணவர்களுக்கு, 50,416 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 12,978 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 10,108 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 9,633 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 8,713 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர். 

அதேபோல, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களுக்கு, 784 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 4,388 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 905 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 450 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 360 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர். 

அதே நேரத்தில் தொழிற்கல்வி பொதுப் பிரிவின் கீழ் மாணவர்களுக்கு, 2027 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 266 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 187 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 176 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 156 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர். 

தொடர்ந்து தொழிற்கல்வி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களுக்கு, 84 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 78 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 21 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 20 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 18 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர். 

44 ஆயிரம் இடங்கள் காலி

இதன்மூலம் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வில் சேர மொத்தம் 53 ஆயிரத்து 311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இதில், 9 ஆயிரத்து 247 இடங்களில் மாணவர்கள் சேர்ந்ததும் தெரிய வருகிறது. இதனால் 44 ஆயிரத்து 84 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மைய செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: பொது வினாத்தாளுடன் கூடிய காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு- தேர்வுத் தேதிகள் இதோ!

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Embed widget