![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ambedkar Law University: விண்ணப்பித்து விட்டீர்களா? அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வது இப்படித்தான்!
TN Ambedkar Law University admission 2024: சட்டப் மாணவர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு மே 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
![Ambedkar Law University: விண்ணப்பித்து விட்டீர்களா? அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வது இப்படித்தான்! TN Ambedkar Law University admission 2024 age limit educational qualification know in detail Ambedkar Law University: விண்ணப்பித்து விட்டீர்களா? அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வது இப்படித்தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/25ddb2f6256f72f56ac46887016805511716636677856332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் சீர்மிகு சட்டப் பள்ளிகள், அரசு சட்டக் கல்லூரிகள், தனியார் சட்டக் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 14 சட்டக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
என்னென்ன படிப்புகள்?
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பி.பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு மே 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ் குமார், சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மே 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். எனினும் 3 ஆண்டு எல்எல்பி, எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மாணவர் சேர்க்கை எப்படி?
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடைபெறும். சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கல்வித் தகுதி
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிகளில் சேர, பொதுப் பிரிவினர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீதம் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எனினும் அம்பேத்கர் சீர்மிகுச் சட்டப்பள்ளியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வில் றைந்தபட்சம்70 சதவீதம் மதிப்பெண்களை வாங்கி இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 60 சதவீதத்திற்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்னால், https://tndalu.emsecure.in/5YearsLaw/Documents/Instructions%20for%20filling%20online%20Application%20Form%20for%205-year%20courses%20-%20Tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உதவி எண்கள்: 044-24641919 / 044-24957414 / +91 7200043361
இ மெயில் முகவரி: helpdesk.tndaluadmissions@gmail.com
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)