மேலும் அறிய

இன்று முதல் 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்; நாளை முதல் விடைத்தாள் நகல்- எங்கே, எப்படி வாங்கலாம்?

TN 10th 11th Exam 2025 mark sheet: பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ கோரி (copy of Answer sheets) விண்ணப்பிக்கலாம்‌. 

 10, 11ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று (மே 19) பிற்பகல் 2 மணி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் இணையத்தின் மூலமாகவே இதனைப் பெறலாம். அதேபோல நாளை முதல் விடைத்தாள் நகல் வழங்கப்பெற உள்ளது. 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாகின. இதில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 93.80% தேர்ச்சி பெற்றனர். அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 8,07,098 பேர் எழுதினர். 11,025 பேர் தேர்வை எழுதவில்லை. இதில், 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.09 சதவீதம் தேர்ச்சி பதிவாகி உள்ளது. இதில் 4,03,949 மாணவிகளும் 3,39,283 மாணவர்களும் அடங்குவர். 

இவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல் ஆகியவை வெளியிடப்படும் தேதி குறித்த விவரத்தை, அதே நாளிலேயே அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

இதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மே 19ஆம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மே 20 முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம்‌ வகுப்பு மாணாக்கர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு விண்ணப்பிக்கத்‌ தேவையான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ (Provisional Certificate) மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) மாணாக்கர்களுக்கு மதிப்பெண்‌ பட்டியல் (Statement of Marks) ஆகியவற்றை 19.05.2025 பிற்பகல் 2 மணி முதல்‌ பெறலாம். இவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டியது முக்கியம்‌.

விடைத்தாள் நகல் எப்போது கிடைக்கும்?

மதிப்பெண்களில் அதிருப்தி உள்ள மாணவர்கள், தங்களின் விடைத் தாளை சரிபார்க்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ கோரி (copy of Answer sheets) விண்ணப்பிக்கலாம்‌. குறிப்பாக, 20.05.2025 முதல்‌ 24.05.2025 வரை தாங்கள்‌ பயின்ற பள்ளியின்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்‌.

துணைத் தேர்வு எப்போது?

தேர்வில்‌ தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின்‌ எதிர்கால நலன் கருதி பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வுகள் 04.07.2025 முதல்‌ நடைபெற உள்ளன.

துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல தனித் தேர்வர்கள்‌ அரசுத் தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களில்‌ விண்ணப்பிக்க வேண்டும்.

எப்போது?

பள்ளி மாணவர்களும் தனித் தேர்வர்களும் 22.05.2025 முதல்‌ 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்குhttps://www.dge.tn.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget