மேலும் அறிய

‘விடாமுயற்சி, தொடர் கல்வியின் மூலம் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும்’ - விழுப்புரம் ஆட்சியர் பழனி

பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தன்னம்பிக்கையினை வளர்த்திட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம், தனியார் கல்லூரியில், ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு படி” வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், ”முதலமைச்சர்  மாவட்டந்தோறும் ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி” வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தி, மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் ‘உயர்வுக்கு படி’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 550 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு ‘உயர்வுக்க படி’ நிகழ்ச்சியின் வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், கல்வி கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணமின்றி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை, விடுதியில் தங்கி படித்தலுக்கான வழிகாட்டுதல், கல்விக்கடன், முதல்பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகை போன்றவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றம் கல்லூரி முதல்வர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.

கல்வி வாழ்வில் உயர்வுக்கு மிக அவசிமான ஒன்றாகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொடர் கல்வியின் மூலம் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும். கல்வி கற்பதின் மூலம், சமூகத்தில் நல்ல மரியாதை, மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும். படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை மனமிருந்தால் மார்க்கம் உண்டு, உங்களுடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் உங்கள் வாழ்க்கை இலட்சியத்தினை அடையலாம். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வி பயின்று என்ன செய்யப்போகிறார்கள் என்ற தவறான புரிதல் சிலரிடம் காணப்படுகிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். பெண்களும் உயர்கல்வி பயில வேண்டும். அதன் மூலம், சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை முழு அளவில் கிடைப்பதுடன், ஒரு பெண் கல்வி பயின்றால் அக்குடும்பமே நல்ல முன்னேற்றம் காண்பதோடு, சமுதாயமும் மேம்பாடு அடைந்திடும். விழுப்புரம் மாவட்டத்தில், 100 சதவீத மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில்சேர்ந்து முன்னோடி மாவட்டமாக வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எனவே, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயின்றிட வேண்டும். தங்களுடைய படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் இருந்திடும் இவை அனைத்தையும் கடந்து வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என அனைவரின் மனதில் தோன்றிட வேண்டும். நீங்கள் கற்கும் கல்வி உங்கள் எதிர்காலத்தினை சிறப்பானதாக மாற்றிடும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிக்கின்ற காலகட்டத்திலேயே வேலைவாய்ப்பும் முகாம் வாயிலாக வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. எனவே, வருகை புரிந்த அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தன்னம்பிக்கையினை வளர்த்திட வேண்டும். நீங்கள் இதுகுறித்த விழிப்புணர்வினை மற்றவர்களுக்கு ஏற்படத்திட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Embed widget