12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
![12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது? tamilnadu plus 2 sslc exam result will release on may 8 official announcement 12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/13261232518c26570ad2156a8c8da6de1682488030119571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்று காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய தொலைபேசி எண்களுக்கு, அவர்களது தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளது. மே 7ம் தேதியன்று மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கு மறுநாளான 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் தொடங்கிய பொதுத் தேர்வு:
கொரோனா தொற்று, ஊரடங்குக்குப் பிறகு மீண்டதை அடுத்து, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கமான காலத்தில் தொடங்கி நடைபெற்றன. இந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆப்செண்ட்:
மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். இதற்கிடையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை என்றும் தகவல் கசிந்தது. அதைத் தொடர்ந்து இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசு ஆலோசனை
பொதுத் தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ளாதது குறித்து அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ''மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்தார். இதனிடையே, மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மே 7ம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மே 8-க்கு மாற்றப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)