மேலும் அறிய

ADW Scholarship: ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்‌ தொகை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆதி திராவிட மாணவர்கள் தங்களின் கல்வி உதவித்‌ தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித்‌ தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

கல்வி உதவித்தொகை:

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. தற்போது வரை சுமார்‌ 3 இலட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ எதிர்நோக்கப்படுகின்றன. 

இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e- KYC முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு ஆதார்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிச் சான்று, வருமானச் சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து ஆவணங்களையும்‌ இணைய வழியில்‌ சரிபார்க்கப்பட்டு,
மாணாக்கர்களின்‌ ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட வங்கிக்‌ கணக்கிற்கு (Aadhaar seeded to bank Account) கல்வி உதவித்‌ தொகை மாணாக்கர்களுக்கு நேரடியாக சென்றடையும்‌ வகையில்‌ கல்வி உதவித்தொகை இணையதளம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

காணொளி வீடியோ 

கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ கல்வி உதவித்‌ தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்‌ என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ (Demo Video) பார்த்து உரிய ஆவணங்களுடன்‌ கல்வி உதவித்‌ தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்‌, கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌, ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட (Aadhaar Seeding) வங்கி கணக்கு விவரங்களே எடுத்துக்கொள்ளப்படும்‌ என்பதினால்‌, கல்வி உதவித்தொகை விடுவிப்பதற்கு முன்னர்‌ மாணாக்கர்‌ அனைவரும்‌ தங்கள்‌ வங்கி கணக்கு விவரங்களை ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்டுள்ளதா (Mapped) என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌. மாணாக்கர்கள்‌ எற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட
விண்ணப்பத்தில்‌ பிழை இருப்பின்‌, அப்பிழையினை மாணாக்கர்‌ அளவிலேயே சரி செய்ய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ வசதிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

போதிய கால அவகாசம்

மேலும்‌, கல்வி உதவித்‌ தொகை திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம்‌ வழங்கப்படும்‌, எனவே இது தொடர்பாக அச்சமின்றியும்‌, பிழையின்றியும்‌ விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை சார்பாக தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அரசு செயலாளர்‌ தெரிவித்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 624.06 இலட்சமாகும். அதில், ஆதி திராவிடர் மக்கள் 118.58 இலட்சமும் (19 சதவீதம்), பழங்குடியினர் மக்கள் 6.51 இலட்சமும் (1.04 சதவீதம்) உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழநாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 721 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

அதற்கு நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக அறிய: https://tnadtwscholarship.tn.gov.in/

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிய: https://www.youtube.com/watch?v=MQbisW_VWZA

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget