மேலும் அறிய

TN Open University: இந்தியாவிலேயே 2-ஆம் இடம்: தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்திற்கு ஏ+ தகுதி!

தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்திற்கு தேசியத்‌ தர உத்தரவாதக்‌ கழகம்‌ (NAAC) A+ தகுதியை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்திற்கு தேசியத்‌ தர உத்தரவாதக்‌ கழகம்‌ (NAAC) A+ தகுதியை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ 2002 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசால்‌ நிறுவப்பட்ட ஒரு மாநிலத்‌ திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகமாகும்‌. பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின்‌(யுஜிசி) 22F & 12B தகுதிநிலையைப்‌ பெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழம் தெரிவித்து உள்ளதாவது:

''இந்திய அளவில்‌ திறந்தநிலை மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி முறையில்‌ படிப்புகளை வழங்கும்‌ கல்வி நிறுவனங்களில்‌ முதல்‌ சுற்றிலேயே தேசியத்‌ தர உத்தரவாத கழகத்தின்‌ (NAAC) தர மதிப்பீட்டு புள்ளி (CGPA) நான்கிற்கு 3.32 புள்ளிகள்‌ பெற்று A+ தகுதியைப்‌ பெற்று, தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ முதல்‌ சுற்றிலேயே NAAC தரவரிசையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்‌. இதற்கான அறிவிப்பினை தேசியத்தர உத்திரவாதக்‌ கழகம்‌ (நாக்‌) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில்‌ செயல்படும்‌ 16 திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகங்களில்‌ தேசியத்‌ தர உத்தரவாத கழகத்தின்‌  தரவரிசைப்‌ பட்டியலில்‌ குஜராத்தின்‌ அகமதாபாத்திலுள்ள டாக்டர்‌ பாபாசாகேப்‌ அம்பேத்கர்‌ திறந்தநிலைப்‌ பல்கலைகழகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம்‌ இடத்தைத்‌ தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ பெற்றுள்ளது.

செயல்பாடுகள்‌ மதிப்பீடு

திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகங்களுக்கான நாக் விதிமுறைகளின்படி கற்றல்‌- கற்பித்தல்‌, மதிப்பீடு, ஆராய்ச்சி, புத்தாக்கம்‌, விரிவாக்கப்‌ பணிகள்‌, உள்கட்டமைப்புகள்‌, கற்றல்‌ வளங்கள்‌, மாணாக்கர்‌ உதவி மற்றும்‌ முன்னேற்றம்‌, கோரிக்கைகளுக்கான தீர்வுகள்‌, தலைமைத்துவம்‌ மற்றும்‌ மேலாண்மை, நிறுவனம்‌ சார்‌ பெறுமதிகள்‌, சிறப்புச்‌ செயல்பாடுகள்‌ ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு அளவுகோல்களைக்‌ கொண்டு தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ செயல்பாடுகள்‌ மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டவற்றின்‌ அடிப்படையில்‌ ஐந்துபேர்‌ கொண்ட நாக் வல்லுநர்‌ குழு கடந்த 19.07.2023 முதல்‌ 21.07.2023 வரை தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழகத்தின்‌ வளாகங்களில்‌ செயல்படும்‌ பல்வேறு கல்விப்‌ புலங்கள்‌, நிர்வாகப்‌ பிரிவுகள்‌, மையங்கள்‌, பல்வேறு செயல்பாடுகளின்‌ பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பிரிவுகள்‌, சமுதாயக்‌ கல்லூரிகள்‌ ஆகியவற்றைப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தது.

21 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த பரிசு

வல்லுநர்‌ குழுவின்‌ வருகையின்போது, தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ ஆறுமுகம்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ உள்‌ தர உத்தரவாத மையத்தின்‌ இயக்குநர்‌ ஆகிய இருவரும்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஒட்டுமொத்த கல்வி சார்‌ செயல்பாடுகள்‌ குறித்து வல்லுநர்‌ குழுவிற்கு எடுத்துரைத்தனர்‌. 210 கற்போர்‌ உதவி மையங்கள்‌, 140 சமுதாயக்‌ கல்லூரிகள்‌ என்ற சிறப்பான உள்கட்டமைப்புகளைக்‌ கொண்டு அனைவருக்கும்‌ தரமான உயர்கல்வியை வழங்கும்‌ பணியைத்‌ தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ மேற்கொண்டு வருவதாக பதிவாளர்‌ பேராசிரியர்‌ பாலசுப்பிரமணியன்‌ வல்லுநர்‌ குழுவிற்கு எடுத்துரைத்தார்‌.

தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ பின்தங்கிய பகுதிகளில்‌ வாழும்‌ பழங்குடியினர்‌, திருநங்கைகள்‌, சிறைவாழ்நர்‌, சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினர்‌ ஆகியோருக்கு உயர்கல்வியை வழங்க எடுத்துவரும்‌ முயற்சிகளுக்கு நாக் வல்லுநர்‌ குழு பாராட்டுத்‌ தெரிவித்தது. 

இணையவழிப்‌ படிப்புக்கு அனுமதி

நாக் தரவரிசை என்பது தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்ழகத்தின்‌ 21 ஆண்டுகால கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகும்‌. தற்போது பதினோரு லட்சம்‌ மாணாக்கர்கள்‌ தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சேர்ந்து பயனடைந்துள்ளனர்‌. தேசியத்‌ தர உத்தரவாத கழகத்தின்‌ 3.32/ 4 தரவரிசைப்‌ புள்ளிகளைப்‌ பெற்றதன்‌ மூலம்‌ யுஜிசியின்‌ அனுமதியோடு இணையவழியில்‌ படிப்புகளை வழங்குவதற்கும்‌ தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம்‌ திறந்தநிலை மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி முறையில்‌ உயர்கல்வியை வழங்குவதில்‌ மிகப்‌ பெரிய பங்களிப்பைத்‌ தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம்‌ வழங்க முடியும்‌''.

இவ்வாறு தமிழ்நாடு திறந்தநிலைப்‌ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget