மேலும் அறிய

7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது

பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.      

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம்,சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுடிவடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது" எனக் கூறப்பட்டது.      

முன்னதாக, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்தது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு தாமதமான நிலையில், அரசியல் சட்டத்தின் 162 ஆவது பிரிவின்கீழ், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆணையை பிறப்பித்தார். இதன் மூலம், கடந்தாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படபட்டது. 

தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் 7.5 இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கருத்துக்காக ஆளுநர் காத்திருந்ததாகவும், அறிவுரை கிடைத்தவுடன் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்" என்றும் தெரிவிக்கப்பட்டது. 

எனவே, நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

கொரோனா பெருந்தொற்று: கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு  காலத்தில் அரசுப்பள்ளி  மாணவர்களின் கல்வி இழப்பு அதிகமாக இருந்தது.  உதாரணமாக, தமிழ்நாட்டில் இணைய வசதி இல்லாத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 80% என பள்ளிக்கல்வித்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.  எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படுப்புகளில்  இடஓதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசின் முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர்.

மேலும், வாசிக்க: 

TN Budget: PTR வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கையில் என்ன இருக்கும்... வெள்ளை அறிக்கை என்றால் என்ன? 

Tokyo Olympics Wrestling: ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா..!             

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Embed widget