மேலும் அறிய

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் 6 லட்சமாக அதிகரித்துள்ளது.

திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.  


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  கூறும்போது, "தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால்  பள்ளி மாணவர்களுக்கு கோடை விடு முறை விடப்படுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் சீராக  இயங்காததால், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய இருப்பதை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட உள்ளது.  பள்ளிகளில் ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வந்தபடி இருக்கிறது.   சாதிக்கயிறு கட்டுதல், பேருந்துகளில் படிகளில் தொங்கிச் செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால்  மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தவுடனும்  அது பிரதிபலிப்பதால் இதுமாதிரியான விரும்பத்தாகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சராக மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்,    முதல்வர் சொன்னது போல் உங்களது கவனத்தை படிப்பில் மட்டும்தான் நீங்கள் செலுத்தவேண்டும்.   இது போன்று  மாணவர்கள் நடந்து கொள்ளும்போது,  அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும்  ஆசிரியர்களுக்கு  அறிவிக்கப்படும்.  அதே நேரத்தில்,  மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாதவாறு கவுன்சிலிங்  வழங்கப்படும்.


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனைத் தடுப்பதற்கு  முதல்வரின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும்  வகையில் ஊஞ்சல் என்ற இதழும்  ஆறு  முதல் ஒன்பதாம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு தேன் சிட்டு என்ற இதழும் மற்றும் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் கனவு ஆசிரியர்  என்ற  இதழும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன்,  ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைக்க பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   பள்ளிமேலாண்மைக்  குழு மூலம் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணவும் முடிவு எடுக்கப்பட கூடிய கட்டாயம் பள்ளி மேலாண்மை குழுவிற்கு உள்ளது.  ஏற்கெனவே அரசுப் பள்ளியில் பயிலும்  மாணவர்களின்  எண்ணிக்கை  4 லட்சமாக  இருந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை  தற்போது மேலும் 6 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget