மேலும் அறிய

பாழாகும் மாணவர் எதிர்காலம்; அரசுக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள் எப்போது?- ஈபிஎஸ் கேள்வி

கடந்த 41 மாதகால திமுக ஆட்சியில்‌ கல்வித்‌ துறையைச்‌ சேர்ந்த அனைவரும்‌ வீதிகளில்‌ இறங்கி போராடக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ்.

அரசுக் கல்லூரிகளில்‌ கவுரவ உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கவும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையில் பணிபுரியும்‌ பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியை ஒட்டி முன்கூட்டியே சம்பளம்‌ வழங்கவும்‌ திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவரும் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

’’வீதிகளில்‌ இறங்கி போராடக்கூடிய அவல நிலை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கும்‌, ஆசிரியர்களுக்கும்‌ சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைவரின்‌ தேவைகளும்‌ பூர்த்தி செய்யப்பட்டன. கடந்த 41 மாதகால திமுக ஆட்சியில்‌ கல்வித்‌ துறையைச்‌ சேர்ந்த அனைவரும்‌ வீதிகளில்‌ இறங்கி போராடக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌ பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்‌ கணினி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா இண்டர்நெட்‌ இணைப்புக்கான டேட்டா கார்டு வழங்கப்பட்டு கல்வியின்‌ தரம்‌ உயர்த்தப்பட்டது; காலிப்‌ பணியிடங்கள்‌ அவ்வப்போது நிரப்பப்பட்டன. தற்போது இந்த ஆட்சியில்‌ விலையில்லா மடிக்‌ கணினியும்‌ வழங்கப்படுவதில்லை; டேட்டா கார்டும்‌ வழங்கப்படுவதில்லை.

ஆனால்‌ திமுக ஆட்சியில்‌, இந்த ஆட்சியாளர்களுக்கும்‌, பல்கலைக்கழகங்களின்‌ வேந்தராகத்‌ திகழும்‌ ஆளுநருக்கும்‌ இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால்‌ பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளன.

பாழாகும் மாணவர் எதிர்காலம்

இதனால்‌, எங்களது ஆட்சியில்‌ முதலிடத்தைப்‌ பிடித்த உயர் கல்வித்துறை, தற்போது அதல பாதாளத்தில்‌ வீழ்ந்துள்ளது. உயர் கல்வி ஒன்றையே நம்பி கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ எதிர்காலம்‌ இந்த ஆட்சியாளர்களால்‌ பாழ்பட்டு நிற்பது வெட்கக்கேடானது.

அதிமுக ஆட்சியில்‌ தமிழத அரசின்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ ஆயிரக்கணக்கான ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியைகள்‌ விரிவுரையாளர்களாகவும்‌, பேராசிரியர்களாகவும்‌ பணியாற்றி வந்த நிலையில்‌, அவ்வப்போது ஏற்படும்‌ காலியிடங்கள்‌ உரிய விதிமுறைகளின்படி நிரப்பப்பட்டு வந்தன.

தற்போது, ஏறத்தாழ நான்காயிரத்திற்கும்‌ மேற்பட்ட உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌; இதில்‌ சுமார்‌ 1,000 கவுரவ உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை  திமுக அரசு நிரப்ப உள்ளதாகவும்‌ செய்திகள் வந்துள்ளன.

இந்த கவுரவ உதவிப்‌ பேராசிரியர்களுக்கு மாதந்தோறும்‌ தொகுப்பூதியமாக 25,000 ரூபாய்‌ வழங்க உள்ளதாகவும்‌; ஏற்கெனவே சுமார்‌ 7,360 கவுரவ உதவிப்‌ பேராசிரியர்கள்‌ இதே ஊதியத்தில்‌ பணியாற்றுவதாகவும்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

கவுரவப் பேராசிரியர்கள் பணி நிரந்தரம்

அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ படிக்கும்‌ மாணவச் செல்வங்களின்‌ அறிவை விரிவாக்கும்‌ தூய பணியில்‌ ஈடுபட்டுள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவது நடைமுறையில்‌ ஒன்றாகும்‌. அதேநேரம்‌, அவர்களுடைய பணி மூப்பின்‌

அடிப்படையில்‌ உரிய விதிமுறைகளின்படி அவர்களை காலமுறை ஊதியத்தில்‌ நிரந்தரமாக்கப்பட வேண்டும்‌ என்பது அவசியமாகும்‌.

தமிழகத்தில்‌ உள்ள அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ காலியாக இருக்கும்‌ அனைத்து உதவிப்‌ பேராசிரியர் பணியிடங்களையும்‌, வரும்‌ கல்வி ஆண்டுக்குள்‌ நிரப்பி உயர்கல்வி பயிலும்‌ மாணாக்கர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்‌.

அக்டோபர்‌ ஊதியத்தை முன்கூட்டியே வழங்குக

மேலும்‌, தமிழகத்தில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிந்து வரும்‌ பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதந்தோறும்‌ தொகுப்பூதியமாக 12,500/- ரூபாய்‌ வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தீபாவளி போனஸ்‌ போன்ற வேறு எந்தவிதமான சலுகைகளும்‌ வழங்கப்படுவதில்லை. கல்விக்‌ கண்‌ திறக்கும்‌ பகுதிநேர பள்ளி ஆசிரியர்கள்‌ மன மகிழ்வுடன்‌ தீபாவளியைக்‌ கொண்டாடும்‌ வகையில்‌, அக்டோபர்‌ மாதத்திற்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும்‌ என‌ திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
Embed widget