மேலும் அறிய

பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக வீதி வகுப்பறைகள் ; கல்வி சுடரேற்றும் சுடர் அமைப்பின் அசத்தல் முயற்சி..!

வீதி வகுப்பறைகளில் பள்ளிப் பாடங்களுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, வனங்கள், சுகாதாரக் கல்வி, விளையாட்டு, இயற்கை வேளாண்மை குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளிக் கூடங்கள் பல மாதங்களாக மூடிக் கிடந்தன. ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியும் அனைத்து விதமான மாணவர்களுக்கும் பயனளித்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் அடர்ந்த வனப்பகுதிகளிலும், மலைக் கிராமங்களிலும் வாழும் பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்பதே சாவலானது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி பயில்வது என்பது பெரும் சாவலாக உருவெடுத்துள்ளது.

மின்சாரம் இல்லை, செல்போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை, டவர் இல்லை என அடுக்கடுக்கான பிரச்சனைகள், மலைத்தொடர்களைப்போல நீள்கின்றன. இது கல்வியில் பின் தங்கியுள்ள அம்மாணவர்களுக்கு கொரோனா பரவல் மேலும் பின்னடைவை அளித்துள்ளது. இதனால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதும், குழந்தை திருமணங்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பழங்குடியின மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக வீதி வகுப்பறைகள் ; கல்வி சுடரேற்றும் சுடர் அமைப்பின் அசத்தல் முயற்சி..!

ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் கல்வி சுடரேற்றும் பணியில் ’சுடர்’ என்ற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுள்ளது. பர்கூர், கடம்பூர், ஆசனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 8-ஆம் வகுப்பு வரையிலான பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக ’வீதி வகுப்பறைகள்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பர்கூர் மலையில் கொங்காடை, அக்னிபாவி ஆகிய கிராமங்களிலும், கடம்பூர் மலைப்பகுதியில் பெரியகுன்றி, அணில்நத்தம், இந்திரா நகர், மாகாளிதொட்டி, உகினியம், நகலூர் ஆகிய கிராமங்களிலும், ஆசனூர் மலைப் பகுதியான கெத்தேசால், கானகரை என 10 பழங்குடியின கிராமங்களில் இந்த வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சர்வதேச எழுத்தறிவு தினத்தில் சுடர் அமைப்பு தொடங்கியுள்ளது.


பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக வீதி வகுப்பறைகள் ; கல்வி சுடரேற்றும் சுடர் அமைப்பின் அசத்தல் முயற்சி..!

கிராமங்களில் உள்ள வீதிகளிலேயே படித்த உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு மாலை நேரங்களில் பாடங்களை கற்பிக்கும் வகையில் வீதி வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன. இந்த வீதி வகுப்பறைகளில் பள்ளிப் பாடங்களுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, வனங்கள், சுகாதாரக் கல்வி, விளையாட்டு, இயற்கை வேளாண்மை குறித்தும் கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர் என்ற அச்சமின்றி குழந்தைகள் உள்ளூரில் உள்ள நமது உரையாடல் மூலமாக கற்க இந்த வீதி வகுப்பறைகள் நல்ல தளமாக அமைந்துள்ளது என சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ் தெரிவிக்கிறார்.


பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக வீதி வகுப்பறைகள் ; கல்வி சுடரேற்றும் சுடர் அமைப்பின் அசத்தல் முயற்சி..!

மேலும் அவர் கூறுகையில்,”கொரோனா காரணமாக ஒன்றரை வருடங்களாக பள்ளி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமவெளி மாணவர்கள் படிக்க வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மலைக் கிராம மாணவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எந்த வித தொடர்பும் அற்ற மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன


பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக வீதி வகுப்பறைகள் ; கல்வி சுடரேற்றும் சுடர் அமைப்பின் அசத்தல் முயற்சி..!

சமவெளியில் உள்ளவர்களை ஆசிரியர்களாக நியமித்தால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களை கொண்டு வீதிகளில் வகுப்புகள் நடத்தி வருகிறோம். இது மலைக்கிராம பழங்குடியின மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களையும் படிக்க தூண்டும் வகையில் அக்கிராமங்களில் சிறுவர் நூலகங்களை அமைத்துள்ளோம். முதல் கட்டமாக 10 கிராமங்களில் வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி படிப்படியாக பல கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த வீதி வகுப்பறைகள் பள்ளிகள் திறக்கும் வரை தொடர்ந்து செயல்படும்” என அவர் தெரிவித்தார்.

இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்தால், பழங்குடியின மாணவர்களின் கல்வி ஒளிமயமாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
HOLIDAY : விடுமுறை லிஸ்ட் ரெடி.! 2026ஆம் ஆண்டில் இத்தனை நாட்களா.? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்
விடுமுறை லிஸ்ட் ரெடி.! 2026ஆம் ஆண்டில் இத்தனை நாட்களா.? குஷியில் அரசு ஊழியர்கள், மாணவர்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Embed widget