மேலும் அறிய

மாநிலம் முழுவதும் நாளை போராட்டம்; 3 நாள் கோட்டை முற்றுகை: டிட்டோஜேக் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு- ஏன்?

மாநிலம் முழுவதும் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக டிட்டோஜேக் எனும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதியில் 3 நாள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் டிட்டோஜேக் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிட்டோஜாக் தெரிவித்து உள்ளதாவது:

’’தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் நேற்று (08.09.2024) காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024, 30.09.2024, 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோ ஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரு தொடக்கக் கல்வி இயக்குநரும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாதகமான எந்த அறிவிப்பும் இல்லை

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு வெளியிடப்பட்டது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்ததில், டிட்டோஜாக் மாநில உயர் மட்டக்குழு, டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை.

இதனால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும், 29.09.2024, 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது’’.

இவ்வாறு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு சொன்னது என்ன?

’’10.09.2024 அன்று 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம்‌ முழுவதும்‌ ஆசிரியர்கள்‌ ஒரு நாள்‌ அடையாள வேலை நிறுத்த போராட்டம்‌ மாவட்ட தலைநகரங்களில்‌ திட்டமிட்டுள்ளது சார்பாக 06.09.2024 அன்று தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ தலைமையில்‌ டிட்டோஜாக்‌ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஏற்கனவே, டிட்டோஜாக்‌ சார்பில்‌ 30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023 அன்று சென்னையில்‌ பேராசிரியர்‌ அன்பழகனார்‌ ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில்‌ ஆர்பாட்டம்‌ நடத்திட முடிவு செய்யப்பட்டதைத்‌ தொடர்ந்து, 12.10.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ தலைமையில்‌, பள்ளிக்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையில்‌ 12 அம்சக்கோரிக்கைகள்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும்‌, டிட்டோஜாக்‌ அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில்‌ மூன்று நாள்‌ டி.பி.ஐ. வளாக முற்றுகைப்‌ போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறைச்‌ செயலர்‌ மற்றும்‌ இயக்குநர்களுடன்‌ 22.07.2024 மற்றும்‌ 30.07.2024 ஆகிய தேதிகளில்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்‌ தொடர்ச்சியாக 06.09.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ சில கோரிக்கைகள் ஏற்கப்படுவதாகவும் சில நீதிமன்ற வழக்குகளால், நிலுவையில் இருப்பதாகவும் ஒரேயொரு கோரிக்கையை மட்டும் ஏற்க இயலாது’’ என்றும் அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.