மேலும் அறிய

Teachers Strike: போராட்டம் திடீர் வாபஸ்; அரசு அச்சுறுத்தல் காரணமா? : இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் அரசு மிரட்டல் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் அரசு மிரட்டல் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

ஒரு வாரத்துக்கும் மேலாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

 அறிவிப்பில் திருப்தி இல்லை

எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. 

தொடர்ந்து நேற்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றன. எனினும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. 

இதைத் தொடர்ந்து நேற்று இரவு அனைவரும் டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது. ஆசிரியர்கள் பேருந்தில் அமர வைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாநிலப் பொதுச் செயலாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் நாங்கள் வந்துள்ளோம். 3 மாத காலத்துக்குள் அரசு எங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிறைவேற்றும் என்று நம்புகிறோம். 

எங்களை அரசு அச்சுறுத்தவும் இல்லை. மிரட்டவும் இல்லை. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகிய இருவரும் முதலமைச்சரின் உத்தரவாதத்தை எங்களிடம் தெரிவித்தனர். இதையும் ஆசிரியர்களின் உடல் நலன் மற்றும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம். இதுவரை எங்களுடன், எங்களுக்காகப் பயணித்த ஆசிரியர்களுக்கும் இயக்கங்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி''. 

இவ்வாறு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget