மேலும் அறிய

வெள்ளகோவிலில் பிஞ்சுகளைக் காத்து தன்னுயிர் நீத்த வாகன ஓட்டுநர்; முதல்வர் நிதியுதவி- பள்ளியில் அஞ்சலி!

தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் நெஞ்சு வலி வந்தபோதும், வண்டியை ஓரமாக நிறுத்தி, குழந்தைகளைக் காத்து தன்னுயிரை விட்ட நிலையில், அவரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அளித்துள்ளார்.  

தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் நெஞ்சு வலி வந்தபோதும், வண்டியை ஓரமாக நிறுத்தி, குழந்தைகளைக் காத்து தன்னுயிரை விட்ட நிலையில், அவரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அளித்துள்ளார்.  

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் நெஞ்சு வலி வந்தபோதும், வண்டியை ஓரமாக நிறுத்தி, குழந்தைகளைக் காத்து தன்னுயிரை விட்ட சம்பவம் ஒருசேர சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

5 லட்ச ரூபாய் நிதியுதவி

இந்த நிலையில், பள்ளிக்‌ குழந்தைகளை காப்பாற்றி பின்னர்‌ தன்னுயிர்‌ நீத்த தனியார்‌ பள்ளி வாகன ஓட்டுநர்‌ சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 5 லட்ச ரூபாய் நிதியை அளித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது:

’’திருப்பூர்‌ மாவட்டம்‌, வெள்ளகோவிலில்‌ உள்ள தனியார்‌ பள்ளியில்‌ வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காங்கேயம்‌, சத்யா நகரைச்‌ சேர்ந்த சேமலையப்பன்‌ (வயது 49) என்பவர்‌ 24.07.2024 அன்று மாலை பள்ளி முடிந்தவுடன்‌ பள்ளிக்‌ குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி நெடுஞ்சாலை வெள்ளகோவில்‌ பழைய காவலர்‌ குடியிருப்பு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்‌ உடனடியாக, தான்‌ ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில்‌ இருந்த பள்ளிக்‌ குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும்‌ ஏற்படாத வகையில்‌ பத்திரமாக நிறுத்தி பின்னர்‌ உயிர்‌ நீத்தார்‌ என்ற செய்தியைக்‌ கேட்டு மிகவும்‌ வருத்தமும்‌, வேதனையும்‌ அடைந்தேன்‌.

கடமை உணர்ச்சியையும்‌ தியாக உள்ளத்தையும்‌ தலைவணங்கிப் போற்றுகிறோம்‌

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும்‌ தன்‌ பொறுப்பிலிருந்த பள்ளிக்‌ குழந்தைகளின்‌ விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர்‌ தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும்‌ தியாக உள்ளத்தையும்‌ நாம்‌ தலை வணங்கிப் போற்றுகிறோம்‌.

காலம்‌ சென்ற பள்ளி வாகன ஓட்டுநர்‌ சேமலையப்பன்‌ ‌குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன்‌ ‌குடும்பத்தினருக்கு ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் இன்று அஞ்சலி

இதற்கிடையே வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளியில், உயிரிழந்த் ஓட்டுநரின் புகைப்படத்துக்கு மாணவர்களும் பெற்றோர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.