மேலும் அறிய

நீட் தேர்வை எழுத உள்ள புதுக்கோட்டை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

வரும் 30ம் தேதி வரை ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.

புதுக்கோட்டை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களே உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கல்வித்துறை ஏற்படுத்தி தந்துள்ளது. என்ன தெரியுங்களா?

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 3ம் ஆண்டு பயின்ற மாணவர்களில் நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதை மாவட்ட கலெக்டர் அருணா தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் கல்வி நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், உயர்கல்விகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2ம் ஆண்டு பயின்ற மாணவர்களில் நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக் கூறி தேர்வை கடினமாகக் கருதாமல் எளிமையாக எடுத்துக் கொண்டு, பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி திட்டமிட்டு நன்றாக படித்து, தேர்வு எழுதினால் அனைவரும் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டி வாழ்த்து தெரிவிக்கிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியானது, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் ஆர்.சி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய பயிற்சி மையங்களில் நடைபெறுகிறது. 

இப்பயிற்சியானது, வரும் 30ம் தேதி வரை ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படும். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும் மற்றும் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட பணி அனுபவத்துடன் நீட் தேர்வில் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 4 -ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு சிறப்பான உயர்கல்வியினை பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), பள்ளித் துணை ஆய்வாளர் மாரிமுத்து, தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு இது சிறப்பான ஒரு வாய்ப்பாகும். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்பதால் அவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும். மாணவர்களின் உயர்ந்த நிலையை அடையவே அரசு சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget