மேலும் அறிய

பிரதம மந்திரியின் யாசவி கல்வி உதவித்தொகை ஓராண்டாகியும் கிடைக்கவில்லை - தென்காசி மாணாக்கர் வேதனை

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் பிரதம மந்திரியின் யாசவி மூலம் அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ரெட்டியார்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இயங்கி வரும் கிராம கமிட்டி அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2460 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு  மாணவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிரதம மந்திரியின் யாசவி எனும் தகுதி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று விருதுநகர், சிவகாசி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் பதினோராம் வகுப்பு மாணவர்களில் 15 பேரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் ஒன்பது பேரும் என மொத்தம் 24 மாணவ, மாணவிகள் அதே ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவில் வெற்றி பெற்றனர்.


பிரதம மந்திரியின் யாசவி கல்வி உதவித்தொகை ஓராண்டாகியும் கிடைக்கவில்லை - தென்காசி மாணாக்கர் வேதனை


தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 75 ஆயிரம் ரூபாயும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் பிரதம மந்திரியின் யாசவி மூலம் அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஆனால் தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு ஆண்டு முழுமையாக முடிந்தும் தங்களுக்கு இன்னும் உதவித்தொகைகள் கிடைக்கவில்லை என வேதனை தெரிகின்றனர். மேலும் தங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் மற்ற பள்ளிகளில் இதே போன்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. தங்கள் பள்ளிக்கு மட்டும் ஏன் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரியவில்லை.  நாங்கள் அனைவரும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். தேர்வு எழுதச்செல்லும் போது கூட கடன் பெற்று கொண்டு தான் எங்களது பெற்றோர் எங்களை அந்த பணத்தில் அனுப்பி வைத்தனர், எனவே அப்பணம் விரைவாக கிடைத்தால் மிகுந்த பயனாக இருக்கும் எனவும், மேல் படிப்பு செல்வதற்கும்  தங்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை கிடைத்தால் பயன்படும். அதோடு கல்வித்தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர். எனவே அரசு இதில் முனைப்பு காட்டி தங்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித்தொகை பணத்தை கொடுக்க அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிரதம மந்திரியின் யாசவி கல்வி உதவித்தொகை ஓராண்டாகியும் கிடைக்கவில்லை - தென்காசி மாணாக்கர் வேதனை

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் பொழுது, “எங்களது பள்ளியில் இருந்து 2022-2023 ஆண்டில் 50 மாணவர்கள்  பிரதம மந்திரியின் யாசவி திட்டத்தின் படி தேர்வு எழுதினர். அதில் தேர்வு எழுதிய மொத்தம் 24 பேர் தேர்ச்சி பெற்றனர். அதற்கு ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு எங்களது மாணவர்கள் ஒரு கனவோடு படித்தனர். குறிப்பாக இரண்டு மாதமாக பயிற்சி எடுத்து பணம் செலவு செய்து சென்று தேர்வு எழுதினர், இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஏழை எளியவர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கனவுகளோடு சென்று தேர்வு எழுதினர். ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை அந்த பணம் வரவில்லை. அது விரைவாக கிடைத்தால் எங்களது மாணவர்களின் மேல் படிப்பிற்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார், 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget