மேலும் அறிய

விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

பிளஸ் 2 பொதுத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 21,675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்கள், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்கள் என 96 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 186 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 565 மாணவர்களும், 11 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 675 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வின் போது மாணவர்கள் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

மேலும், விழுப்புரம் மாதிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர்  கூறியதாவது :-

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் தேர்வின் போது மின்தடை ஏற்படாதவாறு மின் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் இரண்டு காவலர்கள் என அனைத்துப்பள்ளிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு கூடுதலாக நேரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், திருக்கோவிலூர் லட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

இதைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கடந்த ஒரு மாதத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.  மாவட்ட நிர்வாகம் எப்போதும் இது போன்ற விவகாரங்களில் சமாதானப் போக்கை கடைபிடிக்காது என  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget