மேலும் அறிய

விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

பிளஸ் 2 பொதுத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 21,675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்கள், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்கள் என 96 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 186 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 565 மாணவர்களும், 11 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 675 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வின் போது மாணவர்கள் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

மேலும், விழுப்புரம் மாதிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர்  கூறியதாவது :-

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் தேர்வின் போது மின்தடை ஏற்படாதவாறு மின் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் இரண்டு காவலர்கள் என அனைத்துப்பள்ளிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு கூடுதலாக நேரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், திருக்கோவிலூர் லட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..

இதைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கடந்த ஒரு மாதத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.  மாவட்ட நிர்வாகம் எப்போதும் இது போன்ற விவகாரங்களில் சமாதானப் போக்கை கடைபிடிக்காது என  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget