மேலும் அறிய

NTA NCET 2023: ஆசிரியர் பணியில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

2020ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்த தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியர் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம்,  ஐஐடி, என்ஐடி, ஆர்ஐஇ போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சில மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் பணியில் சேரலாம். 

பிஏ அல்லது பிஎஸ்சி பாடத்திட்டத்துடன் பிஎட் இணைத்து கற்பிக்கப்படுவதே ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பாகும். இந்த படிப்பி சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி - National Common Entrance Test) தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளைப் போலவே ஆசிரியர்களுக்கான தேர்வையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 26-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்று (ஜூலை 19) முடிவடைய இருந்தது. 

எனினும் தேர்வர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை என்டிஏ நீட்டித்துள்ளது. விருப்பம் உள்ள தேர்வர்கள் /ncet.samarth.ac.in/ என்னும் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்

இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும் தொலைதூர கிராமப் பகுதிகளில் இருஅதிக அளவிலான தேர்வர்கள் கலந்துகொள்ளவும் ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எப்படி?

தமிழ், ஆங்கிலம், இன உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இந்த விவரங்களை  www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

தேர்வு எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்வு நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தேர்வு முறை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+Inviting+Online+Application+of+NCET+2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

உதவி எண்: +91-11-40759000 / 011 – 69227700 
இ- மெயில் முகவரி: ncet@nta.ac.in, https://ncet.samarth.ac.in

கூடுதல் விவரங்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+creating+Help+Centre.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து காணவும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget