மேலும் அறிய

Jactto Geo: வாபஸ் இல்லை; திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜனவரி 5 அன்று முதலமைச்சரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களிலும்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌ என்று  ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜனவரி 5 அன்று முதலமைச்சரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களிலும்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌ என்று  ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக விலைப்படியைத் தொடர்ச்சியாக ஆறு மாத காலம்‌ தாழ்த்துவதோடு நிலுவைத்‌ தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்‌ விடுப்பு, மீண்டும்‌ பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை‌ நடைமுறைப்படுத்துதல்‌ உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து முதலமைச்சர்‌ எந்தவித அறிவிப்பும்‌ வெளியிடாததால்‌ இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''ஜனவரி 1 அன்று முதலமைச்சர்‌ அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பினை ஏற்று, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், முதலமைச்சரை நேற்று தலைமைச்‌ செயலகத்தில்‌ அவரது அலுவலகத்தில்‌ சந்தித்தனர்‌. இச்சந்திப்பின்போது, 1.1.2023 முதல்‌ 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கு நன்றியினை தமிழக முதலமைச்சருக்குத்‌ தெரிவித்துக்‌ கொண்டனர்‌.

மேலும்‌,  அக விலைப்படியினை மத்திய அரசு வழங்கிய தேதியில்‌ வழங்காமல்‌ தொடர்ச்சியாக ஆறு மாத காலம்‌ தாழ்த்துவதோடு நிலுவைத்‌ தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்‌ விடுப்பு, மீண்டும்‌ பழைய ஒய்வூதியத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்துதல்‌, இடைநிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதுநிலை ஆசிரியர்களின்‌ ஊதிய முரண்பாடுகளைக்‌ களைவது, தொகுப்பூதியம்‌- சிறப்பு காலமுறை ஊதியம்‌ மற்றும்‌ தினக் கூலியில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌, சத்துணவு, அங்கன்வாடி, எம்‌ஆர்பி செவிலியர்‌, வருவாய்‌ கிராம உதவியாளர்‌. ஊர்ப்புற நூலகர்‌, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்‌ ஆகியோருக்கு காலமுறை ஊதியம்‌ வழங்குவது, சாலைப்‌ பணியாளர்களின்‌ 41 மாத பணிநீக்கக்‌ காலத்தினை முறைப்படுத்துதல்‌, காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்புதல்‌, 21 மாத ஊதிய மாற்று நிலுவைத்‌ தொகையினை வழங்குதல்‌ உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்‌. 

தமிழக முதலமைச்சர்‌ பங்கேற்ற வாழ்வாதார மாநாட்டில்‌ முதல்வரிடம்‌ ஜாக்டோ ஜியோ சார்பில்‌ வழங்கப்பட்ட ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌, அரசு பணியாளர்‌ மற்றும்‌ துறை பிரிவு வாரி ஊழியர்களின்‌ வாழ்வாதார கோரிக்கைகள்‌ குறித்தும்‌ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ பேசினர்.

இதனைத்‌ தொடர்ந்து. மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ கூட்டமானது இரா.தாஸ்‌, ஆ.செல்வம்‌. ஜே.காந்திராஜ்‌ ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ பின்வரும்‌ தீர்மானங்கள்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஜனவரி 5 அன்று முதலமைச்சரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களிலும்‌ நடைபெறும்.‌

அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளைத்‌ திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவாறு, எதிர்வரும்‌ 8.1.2023 அன்று மதுரையில்‌ ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்‌ கூட்டம்‌ நடைபெறும்‌. பிற்பகல்‌ 2.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர்‌ கூட்டமும்‌ அதனைத்‌ தொடர்ந்து 3.00 மணிக்கு உயர் மட்டக் குழுக்‌ கூட்டமும்‌ நடைபெறும்‌''.

இவ்வாறு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ தெரிவித்துள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget