மேலும் அறிய

NEET PG 2024: ‘இதுவே வழக்கமாகிவிட்டது’- நீட் முதுகலைத் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; மனு தள்ளுபடி

SC on NEET PG Postponement: எதற்காகத் தேர்வை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கக் கோருகிறீர்கள்? கடைசி நேரத்தில் தேர்வை எப்படித் தள்ளிவைக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை நாங்கள் திட்டமிட முடியாது. 

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.9) தள்ளுபடி செய்துள்ளது.

நீட் முதுகலைத் தேர்வை எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று (ஆக.9) இந்த மனு விசாரணைக்கு வந்தது. 

எனினும் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது, ‘தற்போதைய சூழலில் தேர்வை ஒத்தி வைப்பது என்பது முடியாத ஒன்று. எதற்காகத் தேர்வை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கக் கோருகிறீர்கள்? கடைசி நேரத்தில் தேர்வை எப்படித் தள்ளிவைக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை நாங்கள் திட்டமிட முடியாது. 

ஒருசில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால், 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு

நாடு முழுவதும் நீட், நெட், க்யூட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு, ஆள்மாறாட்டப் புகார்கள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நெட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது. நீட் இளங்கலைத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இந்த நிலையில் நீட் முதுகலைத் தேர்விலும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தேர்வு மையங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைப்பு, தேர்வு விவரங்கள், வினாத்தாள்கள் கசிந்ததாகத் தகவல், தேர்வைத் தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் மனு என சர்ச்சைகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget