மேலும் அறிய

"எங்களுக்குத் தேவை பணி நிரந்தரம்; சிறப்பு மதிப்பெண் அல்ல!" - கொதிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தொனியில் தமிழக முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அமைந்துள்ளதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பும் எழும் விமர்சனமும்

சமீபத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தற்போது பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது தேர்வு நடத்தி அதில் சிறப்பு மதிப்பெண் தருவோம் என்பது அநீதி. 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை, புதிதாக வேலை தேடும் விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்? இதைவிடப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்."

15 ஆண்டு கால உழைப்பும் தற்போதைய நிலையும்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சட்டசபை விதி 110-ன் கீழ், 16,549 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 2012 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது இதில்

 * உடற்கல்வி: 3,700 பேர்

 * ஓவியம்: 3,700 பேர்

 * கணினி அறிவியல்: 2,000 பேர்

 * தையல்: 1,700 பேர்

 * இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்க்கைக்கல்வி: சுமார் 900 பேர்

என மொத்தம் 12,000 பேர் கடந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை முறையான பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது இவர்களின் நீண்ட கால ஆதங்கம்.

சம்பள உயர்வு போராட்டங்கள் - ஒரு பார்வை

திமுக ஆட்சி அமைத்த போது 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய இவர்களுக்கு, பணி நிரந்தரம் கோரி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*2023 போராட்டம்: 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு, 2024-ல் 12,500 ரூபாயாக வழங்கப்பட்டது.

*2026 ஜனவரி 14 அறிவிப்பு: மீண்டும் 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

"அரசு சலுகைகள் ஏதுமின்றி, வெறும் 15,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்பத்தை எப்படிக் கொண்டு செல்வது? அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிட்டல் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில வழக்கில் வழங்கிய தீர்ப்பை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சுட்டிக்காட்டினார். அதில், "மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் (Samagra Shiksha) பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஏற்கனவே இதே பாடங்களை எடுக்கும் சிறப்பாசிரியர்கள் (Special Teachers) காலமுறை ஊதியத்தில் அடிப்படைச் சம்பளமாக 20,600 ரூபாய் பெறுகின்றனர். ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என இருக்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் வழங்குவது உச்ச நீதிமன்றத்தின் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஆணைக்கு எதிரானது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்பு

12,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

*வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுதல்: பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 * இடைக்கால பட்ஜெட்: வரவிருக்கும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

*சிறப்புச் சட்டம்: 15 ஆண்டு அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களை நிரந்தரமாக்கத் தனிக் கொள்கை முடிவு அல்லது சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

முதல்வரின் 'சிறப்பு மதிப்பெண்' அறிவிப்பு தங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget