மேலும் அறிய

"எங்களுக்குத் தேவை பணி நிரந்தரம்; சிறப்பு மதிப்பெண் அல்ல!" - கொதிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தொனியில் தமிழக முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அமைந்துள்ளதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற முடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், சாக்குபோக்குச் சொல்வதா?" என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல்வரின் அறிவிப்பும் எழும் விமர்சனமும்

சமீபத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தற்போது பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது தேர்வு நடத்தி அதில் சிறப்பு மதிப்பெண் தருவோம் என்பது அநீதி. 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை, புதிதாக வேலை தேடும் விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்? இதைவிடப் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்."

15 ஆண்டு கால உழைப்பும் தற்போதைய நிலையும்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சட்டசபை விதி 110-ன் கீழ், 16,549 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 2012 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது இதில்

 * உடற்கல்வி: 3,700 பேர்

 * ஓவியம்: 3,700 பேர்

 * கணினி அறிவியல்: 2,000 பேர்

 * தையல்: 1,700 பேர்

 * இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்க்கைக்கல்வி: சுமார் 900 பேர்

என மொத்தம் 12,000 பேர் கடந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை முறையான பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது இவர்களின் நீண்ட கால ஆதங்கம்.

சம்பள உயர்வு போராட்டங்கள் - ஒரு பார்வை

திமுக ஆட்சி அமைத்த போது 10,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய இவர்களுக்கு, பணி நிரந்தரம் கோரி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*2023 போராட்டம்: 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு, 2024-ல் 12,500 ரூபாயாக வழங்கப்பட்டது.

*2026 ஜனவரி 14 அறிவிப்பு: மீண்டும் 2,500 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

"அரசு சலுகைகள் ஏதுமின்றி, வெறும் 15,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்பத்தை எப்படிக் கொண்டு செல்வது? அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிட்டல் சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில வழக்கில் வழங்கிய தீர்ப்பை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சுட்டிக்காட்டினார். அதில், "மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் (Samagra Shiksha) பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஏற்கனவே இதே பாடங்களை எடுக்கும் சிறப்பாசிரியர்கள் (Special Teachers) காலமுறை ஊதியத்தில் அடிப்படைச் சம்பளமாக 20,600 ரூபாய் பெறுகின்றனர். ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என இருக்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் வழங்குவது உச்ச நீதிமன்றத்தின் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஆணைக்கு எதிரானது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்பு

12,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

*வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுதல்: பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 * இடைக்கால பட்ஜெட்: வரவிருக்கும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

*சிறப்புச் சட்டம்: 15 ஆண்டு அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இவர்களை நிரந்தரமாக்கத் தனிக் கொள்கை முடிவு அல்லது சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

முதல்வரின் 'சிறப்பு மதிப்பெண்' அறிவிப்பு தங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்
CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
Cheapest Gold Rate: உலகத்துல தங்கம் விலை கம்மியா உள்ள நாடுகள் எவை.? வரியில்லாம நாம எவ்வளவு கொண்டு வர முடியும்.?
உலகத்துல தங்கம் விலை கம்மியா உள்ள நாடுகள் எவை.? வரியில்லாம நாம எவ்வளவு கொண்டு வர முடியும்.?
Upcoming Smartphones in July: ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா.? சாம்சங் முதல் மோட்டோரோலா வரை; ஜூலையில் வெளியாகும் பவர்வுல் போன்கள்
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
Embed widget